Skip to main content

பெரியகுளம் அருகே இருதரப்பினர் மோதல்! எஸ்.பி. உட்பட பத்து போலீசார் படுகாயம்!!

Published on 15/06/2019 | Edited on 15/06/2019

தேனி மாவட்டத்தில் துணை முதல்வர் ஒபிஎஸ்சின் சொந்த ஊரான பெரியகுளம் அருகே உள்ள இலட்சுமிபுரத்தைச் சேர்ந்த முரளி என்பவருக்கும் சருத்துப்பட்டியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவருக்குமிடையே கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு நடந்த தகராறில் காயமடைந்த முரளி என்பவர் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

attack



இதனைத் தொடர்ந்து  இலட்சுமிபுரம் பகுதி பொதுமக்கள் நேற்று முன்தினம் முரளியைத் தாக்கிய சருத்துப்பட்டியைச் சேர்ந்தவர்களைக் கைது செய்யக் கோரி தேனியிலிருந்து பெரியகுளம் செல்லும் தேதிய நெடுஞ் சாலையில் திரண்டுசாலை மறியலில் ஈடுபட்டனர். அப்பொழுது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களை சருத்துப் பட்டியைச் சேர்ந்தவர்கள் எனக் கருதி இரண்டு பேரையும் இலட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர்கள் சரமாரியாகத் தாக்கினர்.  



காவல்துறையினர் அவர்களைமீட்டு விசாரித்தபோது இவர்கள் இருவரும் பெரியகுளம் தென்கரை இந்திராபுரியைச் சேர்ந்த அஜித்குமார் மற்றும் சுரேந்தர் ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரும், பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையறிந்த இவர்களது உறவினர்கள் பெரியகுளம் மூன்றாந்தல் பகுதியில் நேற்று  அஜித்குமார், சுரேந்தர் ஆகியோரை த் தாக்கிய இலட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர்களை கைதுசெய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்த  பெரியகுளம் காவல் துணைக்கண்காணிப்பாளர் ஆறுமுகம் தலைமையில்பேச்சு வார்த்தை நடத்தியதில் குற்றவாளிகளை கைது செய்வதாகக் கூறியதையடுத்து மறியலைக்கை விட்டனர்.

 

attack




இந்தநிலையில் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரியும்காவலர் சருத்துப்பட்டியைச் சேர்ந்த சிரஞ்சீவி என்பவர் தேவதானப்பட்டி காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அவரை மர்ம நபர்கள் தாக்கியதில் காயம் அடைந்தார் எனவும், அவர் பெரியகுளம்அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று மேல்சிகிச்சைக்காக தேனி அரசு  மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் தாக்கப்பட்டது இலட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவியதையடுத்து சருத்துப்பட்டி விலக்கில் பெரியகுளம் - தேனி தேசிய நெடுஞ்சாலையில்  சாலையில்  சாலை மறியலில்ஈடுபட முயன்றவர்களைக் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்திக் கலைக்க முயன்றனர்.  

 

 

attack



அப்போது காவல்துறையினர் மற்றும் அந்த பகுதிமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு  ஏற்பட்டு பின்மோதலாக மாறி காவல்துறையினர்  தடியடி நடத்தவே சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கல்வீசித் தாக்கியதில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உட்பட காவலர்கள் 10 பேர் காயமடைந்து பெரியகுளம் அரசுமருத்துவமனையிலும், தேனி க.விலக்கு அரசுமருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று  வருகிறார்கள். 



இதில் காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் கண் அருகில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவரை தேனி மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இதனைத் தொடர்ந்து இலட்சுமிபுரம், சருத்துப்பட்டிஆகிய பகுதிகளில் தாக்கப்பட்டவர்களும், தாக்கியவர்களும், வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பதட்டம் நிலவுகின்றது. மேலும் பதட்டத்தைத் தணிக்க நூற்றுக்கும் மேற்பட்டகாவல்துறையினர் குவிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில் மோதலில் ஈடுபட்டவர்களை விட்டுவிட்டு வீட்டில் தூங்கி  கொண்டிருந்தவர்களை காவல்துறையினர் அத்துமீறி  தாக்கியதில் சருத்துப்பட்டியை சேர்ந்த  ஜெயக்கண்ணண்,  முத்து,  முத்துநாகு, காளியம்மாள் ஆகிய நான்கு பேர்களை 20 க்கும் மேற்பட்ட  காவல்துறையினர் வீட்டின் மாடியில் ஏறி குதித்து வந்து  தாக்கியதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இவர்களும் தேனி அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இச்சம்பவம்  தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.