Skip to main content

'கை கட்டுடன் வலம்... லபக்கென பைக்கை திருடிக்கொண்டு ஜூட்...' –கில்லாடி திருடனை வளைத்த போலீஸ்!

Published on 31/01/2022 | Edited on 01/02/2022

 

bike theft in thirupathur

 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக காவல் நிலையங்களில் புகார் வந்த வண்ணம் இருந்தது. இதன்மீது புகார்கள் எதுவும் பதிவு செய்யாமல் காவல்துறை குற்றப்பிரிவு விசாரணை நடத்தி வந்தது.

 

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அதன்படி வாணியம்பாடி நகரத்தில் அடிக்கடி திருடு போகும் பகுதிகளில் காவல்துறை மற்றும் தனிநபர்கள் வைத்துள்ள சிசிடிவி கேமரா காட்சிகளில் வாணியம்பாடி நகர காவல்துறையினர் பார்த்து ஆய்வு செய்து வந்தனர். ஒரு வீடியோ பதிவில் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே கையில் கட்டுடன் வரும் ஒரு வாலிபர் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு கழுத்தில் கட்டி தொங்கவிடப்பட்டிருந்த கையை எடுத்துவிட்டு அங்கிருந்த ஒரு இருசக்கர வாகனத்தை லாவகமாக சாவியில்லாமல் திறந்து  எடுத்துக்கொண்டு செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.

 

யார் அந்த மர்ம நபர் என போலீசார் விசாரணையை நடத்தினர். அந்த காட்சியை சமூக ஊடகங்களில் போலீசார் பரப்பினர். அந்த நபர் குறித்த தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தன. தகவலின் அடிப்படையில் அந்த நபர் உதயேந்திரம் பகுதியை சேர்ந்த விஜய் என்பது தெரியவந்தது. அவனை போலீசார் கடந்த ஜனவரி 30 ஆம் தேதி கைது செய்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில், வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்தடுத்து மூன்று இருசக்கர வாகனங்களை திருடியதை ஒப்புக் கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறினர். அவன் பதுக்கி வைத்திருந்த மூன்று இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்து அவன் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

 

bike theft in thirupathur

 

அந்த நபர் வேறு ஏதாவது குற்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளாரா, வேறு எங்காவது வாகனங்களை திருடியுள்ளாரா, தனியாளா அல்லது பின்னணியில் திருட்டு கும்பல் ஏதாவது உள்ளதா? திருடிய வாகனங்களை எங்கு விற்பனை செய்கிறான் என போலீஸ் தனிப்படை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.

 

கையில் அடிபட்டதைப்போல் கட்டுப்போட்டுக் கொண்டு ஊரில் வலம் வந்து அய்யோ பாவம் என தன்னை பார்ப்பவர்களை ஏமாற்றியபடி இருசக்கர வாகன திருட்டில் ஈடுப்பட்டவன் கேமரா கண்களில் சிக்கி கைதாகியுள்ளான்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.