Skip to main content

ஈரோட்டில் இளைஞர் துண்டு துண்டாக வெட்டி கொலை...!

Published on 10/04/2019 | Edited on 10/04/2019

ஈரோடு அருகே உள்ள முத்துமாணிக்கம் நகர் என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை கொலை செய்து உடல் பாகத்தை  துண்டு துண்டாக வெட்டி அதை சாக்கு மூட்டையில் கட்டி, வீட்டில் பதுக்கி வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலையில் ஈடுபட்டதாக வட இந்திய தம்பதியினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

erode


 
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் நிதீஷ் குமார், சசி தம்பதியினர். இவர்கள்  ஈரோடு  முத்துமாணிக்கம் நகர் பகுதியில் கடந்த பத்து  மாதமாக ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து கொண்டு கூலி வேலை செய்து வந்தனர்.
 

இவர்கள்  சொந்த ஊரான பீகார் செல்லும்போது ரயிலில் நவின்குமார் என்ற பீகார் இளைஞன் பழக்கமாகியுள்ளான் சில மாதங்களுக்கு முன் அவனும் இவர்கள் வீட்டிலேயே தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளான்.
 

இந்த நிலையில் நிதீஷ்குமாரும் சசியும் தீடீரென பீகாரில் உள்ள  நவின்குமார் பெற்றோர்க்கு போன் மூலம் ரூ 2 லட்சம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.  நவின்குமார் பெற்றோர், இது குறித்து பீகார் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்கள். அதன் பேரில் பீகார் போலீசார்  ஈரோட்டிற்கு வந்துள்ளனர். 


இதற்கிடையே போலீஸ் தேடுவதை அறிந்த நித்திஷ்குமார், சசி  ஆகிய இருவரும் நவின்குமாரை கொலை செய்து இரும்பை அறுக்கும்  ஆக்சா பிளேடு மூலம் தலை, கை, கால், இடுப்பு  என உடல் பாகத்தை தனிதனியாக துண்டுதுண்டாக வெட்டி அதை சாக்கு பையில் போட்டு மூட்டையாக  கட்டி வைத்துவிட்டனர்.
 

பீகார் போலீசார் ஈரோடு போலீஸ் உதவியுடன்  அப்பகுதியில் விசாரணை செய்து நித்தீஷ்குமார் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது நவின்குமாரை கொலை செய்து மூட்டைகட்டி வைத்து இருப்பது தெரிய வந்தது. நித்தீஷ்குமார் அவரது மனைவி சசி ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து நவின்குமார் உடல் பாகத்தை  உடற்கூறு ஆய்வுக்கு ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர்.
 

நவின்குமார் கொலை சம்பவம் குறித்து மேலும் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்றும் இது பணம் கேட்டு மிரட்டலுக்காக நடந்த கொலையா? அல்லது கள்ளக் காதல் விவகாரமா என்று ஈரோடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர், இளைஞர் கொல்லப்பட்டு உடல் பாகங்கள் ஐந்தாறு துண்டுகளாக வெட்டப்பட்டு சாக்கு மூட்டையில் வீட்டுக்குள் வைத்திருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.