Skip to main content

ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை பாத்ரூமில் கொலை செய்த தொழிலாளி!

Published on 20/09/2021 | Edited on 20/09/2021

 

Bihar woman passes away in kallakurichi police investigation on case

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சிறுவங்கூர் கிராம எல்லைப் பகுதியில் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்தக் கட்டட பணிகளில் வேலை செய்வதற்காக ஒடிசா, பீகார் போன்ற வட மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டு அவர்களைக் கொண்டு கட்டட பணி செய்துவருகின்றனர். 

 

இதில் பீகார் மாநிலம், அம்ரித் பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரிஜிவ் பிரானு என்பவரது மனைவி மூர்த்தி தேவி (25) என்பவர் கட்டட பணி செய்துவந்துள்ளார். அதே பகுதியில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கேசப் நாயக் (33) என்பவரும் கட்டடப் பணி செய்துவந்துள்ளார். வேலை நேரத்தின்போது மூர்த்தி தேவியிடம், கேசப்நாயக் அவ்வப்போது கிண்டல், கேலி செய்துவந்துள்ளார். 

 

இந்த நிலையில், நேற்று (19.09.2021) காலை அதே கட்டடப் பகுதியில் உள்ள பாத்ரூம் பகுதியில் மூர்த்தி தேவி, துணி துவைத்துக்கொண்டிருந்தபோது கேசப் நாயக் அவரிடம் நெருங்கி, தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். அதற்கு மூர்த்தி தேவி மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கேசப் நயக் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மூர்த்தி தேவியை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் மூர்த்தி தேவி, ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்துள்ளார். 

 

இதனை தற்செயலாகப் பார்த்த மற்றொரு கட்டடத் தொழிலாளி, அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து கேசப் நாயக்கை தாக்கியுள்ளார். அவர் அந்த பாத்ரூமிலேயே உள்பக்கம் தாழ்பாள் போட்டு மறைந்துகொண்டார். சற்றுநேரத்தில் மூர்த்தி தேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்த தகவல் கள்ளக்குறிச்சி போலீசாருக்குத் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், பாத்ரூமில் பதுங்கியிருந்த கொலையாளி நாயக்கை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். 

 

போலீசார் பிடிப்பதற்கு முன் பாத்ரூமுக்குள் பதுங்கியிருந்த கேசப் நாயக், தனது உடம்பில் தனக்குத்தானே ஆயுதங்களால் காயம் ஏற்படுத்திக்கொண்டது தெரியவந்தது. இதையடுத்து, கேசப் நாயக்கை சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. உயிரிழந்த மூர்த்தி தேவியின் சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். 

 

இந்த சம்பவம் குறித்து கட்டடப் பணி மேற்பார்வையாளர் ரஞ்சித், கள்ளக்குறிச்சி போலீசில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி உள்ளிட்ட போலீசார், கேசப் நாயக் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள கேசப் நாயக்கிற்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.