Advertisment

''பீகார் குழு தமிழக முதல்வருக்கு நன்றி சொல்லிவிட்டுச் சென்றார்கள்'' - அமைச்சர் சி.வி.கணேசன் பேட்டி

தமிழகத்தில் பணிபுரியும் வடமாநிலத்தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வெளியான போலி தகவல்களைத்தொடர்ந்து இந்த விவகாரம் பேசுபொருளாகியுள்ளது.

Advertisment

இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பேசுகையில், ''வடமாநிலத்தொழிலாளர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 6 லட்சத்திற்கும் அதிகமான வடமாநிலத்தொழிலாளர்கள் தமிழகத்தில் பணியாற்றுகின்றனர். பீகாரிலிருந்து ஒரு குழு தமிழகம் வந்திருந்தது. உள்ளாட்சித் துறையின் செயலாளர் பாலமுருகன் தலைமையில் நான்கு அதிகாரிகள் சென்னையில் ஆலோசனையில் ஈடுபட்டார்கள்.

Advertisment

பின்னர் அக்குழுதிருப்பூருக்கு சென்று மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரைச்சந்தித்துப் பேசி வெளிமாநிலத்தொழிலாளர்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கு எல்லாம் சென்று பார்வையிட்டனர். பிறகு அவர்களிடம், ‘நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம். நன்றாக இருக்கிறோம். எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை’ எனவடமாநிலத்தொழிலாளர்கள்சொன்னார்கள். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தஅந்த குழு, ‘தமிழ்நாடு அரசு சிறப்பான நடவடிக்கை எடுத்துள்ளது, தொழிலாளர்கள் நன்றாக இருக்கிறார்கள் இந்த செய்தி கேள்விப்பட்டு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். மாவட்ட நிர்வாகத்திற்கும்தமிழ்நாடு முதல்வருக்கும் நன்றி என்று சொல்லிவிட்டுச் சென்றார்கள்'' என்றார்.

Bihar TNGovernment
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe