நடிகர் விஜய்யின் 'பிகில்' படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று (05/02/2020) காலை முதல் சோதனை நடத்தி வரும் நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் சோதனை நடைபெற்றது. இந்நிறுவனத்துக்கு சொந்தமான சென்னை தி.நகரில் உள்ள வீடு, தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகம் உள்பட 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தினர்.

Advertisment

 bigil movie;23 hour raid completed ...

அதேபோல்நேற்று நெய்வேலியில் நடைபெற்ற மாஸ்டர் படப்பிடிப்புத்தளத்தில் இருந்து நேற்று இரவுசென்னை அழைத்துவரப்பட்ட நடிகர்விஜயைபனையூரில் உள்ள வீட்டில்வைத்து வருமான வரித்துறைஅதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

Advertisment

இந்நிலையில் இரண்டு நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை தற்பொழுது நிறைவடைந்துள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.விஜயின் இல்லத்தில் 23 மணி நேரத்திற்கும் மேலாக வருமான வரித்துறையினர் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பிகில் படத்திற்காக பெற்ற சம்பளம் தொடர்பாக நடிகர் விஜயிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவிடம் வருமானவரித்துறை வாக்குமூலம் பெற்றதாகவும், பிகில் படத்தில்நடிப்பதற்குவிஜய் 30 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாகவும்,விஜயின் சொத்து விபரங்கள் குறித்தும் வருமானவரித் துறையினர் ஆய்வு நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisment