Skip to main content

இவர்கள்தான் பிக்பாஸ்3 போட்டியாளர்கள்!? 

Published on 22/06/2019 | Edited on 22/06/2019

விஜய் டிவில உலகநாயகன் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் மூனாவது சீசனுக்கு வந்துருச்சு.. முதல் சீசன்ல ஜுலி, காயத்ரி, ஆர்த்தி, ஆரவ், ஓவியான்னு செம பரபரப்பா விறுவிறுப்பா போச்சு.. ஆனா அந்த விறுவிறுப்பு ரெண்டாவது சீசன்ல இருந்துச்சான்னு கேட்டா கொஞ்சம் கம்மியாதான் இருந்துச்சு. இருந்தாலும் பிக் பாஸுக்கான மாஸ் இன்னும் மக்கள் மத்தில இருந்துட்டே தான் இருக்கு.. மூனாவது சீசன் வரப்போகுதுன்னு சொன்னவுடனே அந்த பரபரப்பு அதிகமாக ஆரம்பிச்சுருச்சு.

முக்கியமா, இந்த சீசன கமல் தொகுத்து வழங்குவாரான்ற கேள்வி எழுந்துச்சு. ஏன்னா போன சீசனுக்கும் இந்த சீசனுக்குமான கேப்ல, கமல் மக்கள் நீதி மய்யம்னு அவரோட கட்சிய ஆரம்பிச்சுட்டாரு.  அதனால இந்த சீசன் அவர் பண்ணுவாரா மாட்டாரான்னு ஒரு சின்ன சந்தேகம் இருந்துச்சு. பிக் பாஸ் 3 ப்ரோமோ வந்ததும் அது சால்வ் ஆய்டுச்சு. எல்லார் கவனமும் அடுத்த கேள்விக்குள்ள போயிருச்சு.

யார் அந்த 14 கன்டெஸ்டன்ட்ஸ்? இதுதான் அந்த மில்லியன் டாலர் கேள்வி. ஒவ்வொருத்தரும் இஷ்டத்துக்கு அவுக வாராக.. இவுக வாராகன்னு கதைய அவுத்துவிட ஆரம்பிச்சுட்டாங்க. யார்லாம் வரனும்ணு நாம நினைக்கறது இருக்கட்டும்.. இப்ப அந்த பிக் பாஸ் வீட்டுக்குள் யார் யார் போகப் போறாங்கன்றத பாப்போமா?

1. கவின் என்கிற வேட்டையன்

விஜய் டிவில கனா காணும் காலங்கள் சீரியல் மூலமாக அறிமுகமானவர் கவின். ஆனா அதுக்கடுத்து சரவணன் மீனாட்சி சீரியல்ல, அவர் பண்ண வேட்டையன் கேரக்டர்தான் அவர தமிழ்நாடு ஃபுல்லா ஃபேமஸ்  ஆக்குச்சு. நிறைய ரசிகர்களயும் சம்பாதிச்சு கொடுத்துச்சு.

 

kavin



வேட்டையன் கேரக்டர் அந்த சீரியல்ல பண்ண சேட்டைகளும், கவினோட இயல்பான நடிப்புமா சேர்ந்து அவர ரொம்ப சீக்கிரத்துலயே பெரிய புகழுக்கு கூட்டிட்டு போச்சு. தொடர்ந்து விஜய் டிவிலயே சில நிகழ்ச்சிகள தொகுத்து வழங்கிட்டு இருந்தாங்க. அடுத்த சிவகார்த்திகேயன்னு கூட அவர கூப்ட ஆரம்பிச்சாங்க.

இந்த நிலைமைலதான் டிவில நடிக்கறத நிப்பாட்டுனாரு கவின். இனிமே சினிமாலதான் நடிப்பேன்னு முடிவு பண்ணி சில படங்கள் கமிட் ஆனார். விக்ரம் பிரபு நடிச்ச 'சத்ரியன்' படத்துல ஒரு சின்ன ரோல் பண்ணாரு. தனியா ஹீரோவா, 'நட்புனா என்னானு தெரியுமா' படத்துல கமிட் ஆனார். நிஜமாவே அடுத்த சிவகார்த்திகேயனா வந்துருவாருன்னு எல்லாரும் எதிர்பார்த்து காத்துக்கிட்டு இருந்தப்ப, 'நட்புனா என்னானு தெரியுமா' படம் ரிலீஸ்  ஆக ரொம்ப லேட்டாச்சு. இதனாலயே கூட, படம் நல்லா இருக்குன்னு டாக் இருந்தும், சரியான தியேட்டர்கள் கிடைக்காம, படம் பெரிய அளவுல வெற்றி பெறாம போயிருச்சு.

3 வருஷமா டிவி பக்கம் வராம இருந்த கவின், பிக் பாஸ் 3 மூலமா மறுபடியும் சின்னத்திரைக்கு வர்றாரு. சினிமால வாய்ப்பு தேடிட்டு இருக்குறவங்களுக்கும், வெற்றிக்காக காத்துக்கிட்டு இருக்குறவங்களுக்கும், பிக் பாஸ் ஒரு பெரிய மேடையா இருக்கும்ன்ற நம்பிக்கை பலமா இருக்கு. கவினும் அந்த நம்பிக்கைல தான் பிக் பாஸ்க்குள்ள போறாரு. நிச்சயமா பிக் பாஸ் 3 சினிமாவுல அவருக்கான கதவுகள திறந்து விடட்டும்.


2. மோகன் வைத்யா

பிக் பாஸ் 3 வீட்டுக்குள்ள போகப்போற அடுத்த கன்டெஸ்டன்ட், கர்னாடிக் சிங்கர், வயலின் கலைஞர் மோகன் வைத்யா. இவர் வீணை வித்வான் ராஜேஷ் வைத்யாவோட அண்ணன். சினிமாலயும் சில சீரியல்கள்லயும் இவர் நடிக்கவும் செஞ்சுருக்காரு.

 

mohan vaithya



சாய் சிஷ்யான்னு ஒரு ம்யூசிக் ஸ்கூல வச்சு நடத்திட்டு இருக்கும் மோகன் வைத்யா, ரொம்ப தன்மையா பேசக்கூடிய மனிதர். பிக் பாஸ் வீடு அவரோட அந்த தன்மையா மாத்துதா இல்லையான்றத வெயிட் பண்ணி பாக்கலாம்.

3. வனிதா விஜயகுமார்

பிக் பாஸ் 3 வீட்டுக்குள்ள போகப்போற இன்னொரு போட்டியாளர், வனிதா விஜயகுமார். நம்ம நாட்டாமை விஜயகுமாரோட பொண்ணேதான். அதுமட்டுமில்ல.. 'சந்திரலேகா' படத்துல நம்ம தளபதி கூட ஹீரோயினா நடிச்சுருப்பாங்களே அதுவும் இந்த வனிதா விஜயகுமார் தான். தமிழ்ல மட்டுமில்ல, மலையாளம், தெலுங்குல பல  மொழிகள்ல நடிச்சுருக்காங்க.

 

vanitha



சமீபத்துல விஜயகுமார் கூட சில வேண்டத்தகாத பிரச்சினைகளும் நடந்துச்சு. குடும்பத்துக்குள்ள பிரச்சினைகள் வர்றது சகஜம்தான். அது எல்லாத்துல இருந்தும் மீண்டு, பிக் பாஸ் 3 வீட்டுக்குள்ள அடியெடுத்து வைக்கப் போறாங்க வனிதா விஜயகுமார். வீட்டுக்குள்ள சரவெடி ஏதாவது இருக்கா, போன சீசன்ல வந்த போட்டியாளர்கள்ல யார மாதிரி வனிதா இருக்கப் போறாங்கன்றத வெயிட் பண்ணிப் பாப்போம்.

4. மீரா மித்துன்

பிக் பாஸ் வீட்டுக்குள் போகப் போற அடுத்த போட்டியாளர் மீரா மிதுன். '8 தோட்டாக்கள்'னு ஒரு படம் வந்துச்சே.. அந்தப் படத்தில் நடித்தவர் இந்த மீரா மிதுன். யாருன்னு யோசிக்கறீங்களா.. 'தானா சேர்ந்த கூட்டம்' படத்துல கலையரசனோட மனைவியா நடிச்சுருப்பாங்க இல்லயா.. இப்ப ஞாபகம் வந்துருச்சா..? அவங்கதாங்க மீரா மிதுன்.
 

meera mithun



நம்ம எத்திராஜ் காலேஜ் படிச்சவங்க மீரா மிதுன். 'Miss Queen of India' போட்டியில, தமிழ்நாட்டு சார்பா கலந்துகிட்டதும் இந்த மீரா மிதுன்தான். சில வருஷத்துக்கு முந்தி, விஜய் டிவில ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் கலந்துகிட்டு ரெண்டாவது இடத்தயும் புடிச்சாங்க மீரா மிதுன். சோ... பிக் பாஸ் வீட்டுக்குள்ள ஒரு ஹீரோ போறாரு, ஒரு ஹீரோயினும் போறாங்க...

5. மதுமிதா

மதுமிதான்னு சொன்னா கூட நிறைய பேருக்கு தெரியாது. ஆனா 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்துல தேனடை.. ஜாங்கிரின்னு சந்தானம் கூப்டுவாரே..  அவங்கதான் திஸ் மதுமிதா. முதல்ல லொள்ளு சபால நடிக்க ஆரம்பிச்சு.. அதுக்கப்பறம் சினிமாக்கு வந்தவங்க மதுமிதா. 

 

madhumitha



நடிச்ச முதல் படமான 'ஓகே ஓகே' லயே செம ஹிட் ஆய்ட்டாங்க. அத தொடர்ந்து 'அட்டகத்தி', 'ராஜா ராணி', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா'ல அந்த ஸ்ஸ் ஸ்ஸ் ஸ்ஸ்ஸ் சீன், 'ஜில்லா', 'காக்கி சட்டை', 'காஞ்சனா 2', 'இருட்டு அறையில் முரட்டுக் குத்து'ன்னு ஏகப்பட்ட படங்கள் நடிச்சுட்டாங்க மதுமிதா. சினிமால பண்ணது ஃபுல்லா காமெடியான ரோல்தான். ஆனா பிக் பாஸ் வீட்டுக்குள்ளயும் காமெடியாவே இருப்பாங்களா.. இல்ல 'தூரத்துல பாத்தாதான்டா நான் காமெடி.. கிட்டத்துல பாத்தா டெரர் டா'ன்னு மல்லுக் கட்டுவாங்களான்னு தெரியல.


6. பவர்ஸ்டார் சீனிவாசன்

நம்ம லிஸ்ட்ல இருக்குற கடைசி போட்டியாளர்... இவர் பேர சொன்னாலே அதிரும். யெஸ்.. நம்ம பவர்ஸ்டார் சீனிவாசன்தான் பிக் பாஸ் வீட்டுக்குள்ள போகப்போற அடுத்த போட்டியாளர். எங்கருந்து வந்தாருன்னே தெரியாம திடீர்னு ஃபேமஸாக ஆரம்பிச்சவரு நம்ம பவர் ஸ்டார். 'லத்திகா'னு ஒரு படத்த எடுத்து, அத தியேட்டர்ல 300 நாள் ஒட வச்சு, நான்தான் காசு கொடுத்து ஓட வச்சேன்னு பரிதாபமா சொன்ன மனுசன் நம்ம பவர் ஸ்டார் சீனிவாசன். 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்துல நடிச்சு, ஆல் ஓவர் தமிழ்நாடு தெரிஞ்ச குழந்தை முகமானவர் பவர் ஸ்டார். அதுக்கப்பறமும் காமெடியா நிறைய படங்கள் ட்ரை பண்ணிப் பாத்தாரு பவர் ஸ்டார். பெருசா எதுவும் வொர்க்-அவுட் ஆகல. ஆனா 'கவன்' படத்துல ஒரே சீன்ல வந்தாலும் தியேட்டரே கை தட்டுற மாதிரியான ஒரு சீன்ல நடிச்சுட்டு போயிருப்பாரு பவர் ஸ்டார். 'நான் வெறும் சீனிவாசன் கிடையாது. டாக்டர் சீனிவாசன்'னு வேற சொல்லிட்டு இருந்தாரு. ஒரு செக் மோசடி வழக்குல சிக்கி ஜெயிலுக்கு வேற  போய்ட்டு வந்தாரு நம்ம பவர் ஸ்டாரு.

இப்பதான் அந்த கான்ட்ரவர்சி எல்லாம் முடிஞ்சுருக்கு. மறுபடியும் விட்ட எடத்துல இருந்து தொடங்கனும்.. அதே பாப்புலாரிட்டி வேணும்.. ஆனா ஜாலியான  வீட்ல இருந்தே செய்யனும்னு நினைச்சுருப்பாரு போல... கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையான்னு இந்த பிக் பாஸ் 3 வீடு கூப்ட உடனே என்ட்ரி கொடுக்குறாரு பவர் ஸ்டார் சீனிவாசன். இதுக்கு முன்னாடி உள்ள போன காமெடியன்ஸ்லாம் ஒன்னு எமோஷனலா அழுதுகிட்டோ. இல்ல கோபமா சண்டை போட்டுகிட்டோ தான் இருந்துருக்காங்க. பவர் ஸ்டார் என்ன பண்ணப் போறார்னு போகப் போக தெரிய ஆரம்பிச்சுரும்.

இது நமக்குக் கிடைத்த அதிகாரபூர்வமில்லாத, பாதி லிஸ்ட். முழுமையான தகவல், நாளை நமக்குக் கிடைத்துவிடும். அதில் மாற்றங்கள் இருக்கிறதா இல்லையா என்பதை நாளை பார்ப்போம்.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இந்தியாவிலேயே இவரைப் போன்ற எம்பி யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை' -கமல்ஹாசன் பேச்சு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Kamal Haasan campaign in madurai

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் மதுரையில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கூட்டத்தில் பேசிய அவர், ''இவரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் வழக்கமாக என்னை கேட்பார்கள் அரசியலுக்கு ஏன் வந்தீர்கள்? நீங்கள் எப்படி கையெழுத்து போட போகிறீர்கள் என்று. வித்தியாசமான அரசியல் செய்ய வந்திருக்கிறேன் என்று பெருமையாக மார் தட்டிக் கொண்டேன். இனி நாம் செய்ய போவதையும் செய்து இருப்பதைதான் சொல்ல வேண்டுமே தவிர, செய்யத் தவறியவர்களின் குற்றங்களை பட்டியலிடுவது என்பது நேர விரையம். அது உங்களுக்கே தெரியும். எங்கெங்கு தப்பு நடந்திருக்கிறது என்பதை சொல்லி உங்க நேரத்தையும் எங்க நேரத்தையும் வீணடிக்க கூடாது.

நவீன அரசியல் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ளும் அரசியலாக இருக்கக்கூடாது. ஒருவரை ஒருவர் திருத்திக் கொள்ளும் அரசியலாக இருக்க வேண்டும். அதனால் நான் சொல்கிறேன் இவர் செய்ததை சொல்கிறேன். கோவிட் என்ற காலகட்டத்தில் ஒரு சாதாரணமாக எம்பிக்கு  கொடுக்க வேண்டிய ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கீடு கூட இல்லாத நேரத்தில், பல நற்பணிகளை செய்து இருக்கிறார். அவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க வேண்டியது உங்களுடைய கடமை. இந்த வட்டாரத்திற்கு நீங்கள் செய்யும் நல்லது.

இவர் நல்ல எழுத்தாளர், பெரிய பெரிய நாவல்களை எழுதி இருக்கிறார் என்பதெல்லாம் சொல்வதை விட ஒரு இடத்திற்கு பம்ப் செட் போட்டு கொடுத்திருக்கிறார். ஒரு விவசாய ஊருக்கு ரயில் பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறார். இவர் செய்த நற்பணிகளை எல்லாம் திரட்டி ஒரு வீடியோ ஆவணம் செய்திருந்தார்கள். அதை வெளியிடும் பெருமை எனக்கு கிடைத்தது. நான் சொல்லுவது மிகை என்றால் திருத்திக் கொள்கிறேன். ஆனால் இந்தியாவிலேயே இப்படி, தான் செய்த விஷயங்களை பட்டியல் போடும் அளவிற்கு வேலை செய்த எம்பிக்கள் என்று யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை'' என்றார்.

Next Story

'சர்வாதிகாரத்தை எதிர்த்து ஜெயிலுக்கெல்லாம் போய் கஷ்டப்பட்டிருக்கிறார் முதல்வர்'-கமல்ஹாசன் பேச்சு 

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
'Chief Minister has gone to jail and struggled against dictatorship' - Kamal Haasan speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் டி.ஆர்.பாலுவை ஆதரித்து நங்கநல்லூர் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பரப்புரையில் ஈடுபட்டார். அவர் பேசுகையில், 'சர்வாதிகாரத்தை எதிர்க்க வேண்டும் என்பது இப்போதல்ல அவருடைய இளமையிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெயிலுக்கெல்லாம் போய் கஷ்டப்பட்டிருக்கிறார். எதற்காக அப்பொழுதும் சர்வாதிகாரத்தை எதிர்த்துதான். இப்பொழுதும் சர்வாதிகாரத்தை எதிர்த்து தான். கட்சிகள் எல்லாம் அப்புறம் மக்களுக்கு சர்வாதிகாரம் பிடிக்காது. நல்ல தலைவனுக்கும் அது பிடிக்காது. ஆயிரம் அன்னசத்திரம் வைத்தாலும் ஒருத்தனுக்கு படிப்பு கற்றுக் கொடுத்து விட்டால் அது அதற்கு சமம் என்று சொல்வார்கள். ஆனால் முதல்வர் முதலில் நீங்கள் சாப்பிடுங்க அப்புறம் படி என இரண்டையும் செய்கிறார். அது ரொம்ப முக்கியம். அவருடைய மகன் உலகத்தரத்தில் நம்முடைய தமிழர்கள் ஸ்போர்ட்ஸில் முன்னுக்கு வர வேண்டும் என்பதற்காக உலக தரத்தில் பல ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார்.

பணக்கார வீட்டு பிள்ளைங்க, வசதியாக இருப்பவர்கள் டைம் இருக்கும் பொழுது விளையாட்டு பழகக் கூடியவர்கள் மட்டும்தான் செய்ய முடியும் என்பதில்லாமல் இந்த வீதியிலிருந்து நாளை ஆசிய சாம்பியன் வரலாம், இந்த வீதியில் இருந்து வரலாம், சாதி, மதம், வசதி பற்றி எதுவும் இல்லை. உங்கள் திறமை தான் அதை முடிவு செய்யும். ஆண் பெண் என்ற பேதம் கூட கிடையாது. நல்ல திறமை இருந்தால் அகில உலகில் பதக்கம் வெல்லும் போட்டியின் வெற்றியாளர்களாக ஆக முடியும்'' என்றார்.