Skip to main content

பிக்பாஸ் நித்யா தமிழக தலைவராக நியமனம்...

Published on 24/01/2019 | Edited on 24/01/2019

 

nithya




காமெடி நடிகரும், பல்வேறு நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்தவர் பாலாஜி. அவரது மனைவியும், பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் நித்யா. தற்போது இவர் பல சமூக பணிகளை செய்துவருகிறார். மும்பையில் கடந்த வாரம் தொடங்கப்பட்ட தேசிய பெண்கள் கட்சியின் தமிழ்நாடு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நித்யா மீது காவல் நிலையத்தில் புகார்

Published on 11/05/2023 | Edited on 11/05/2023

 

 complaint against Nityathadi balaji wife nithya in police station

 

தமிழ் படங்களில் காமெடி கதாபாத்திரத்திலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஜட்ஜாகவும் பிரபலமானவர் தாடி பாலாஜி. இவருக்கு நித்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து இருவருக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். நித்யா தனது குழந்தையுடன் சென்னை மாதவரம் பகுதி சாஸ்திரி நகரில் வசித்து வருகிறார்.

 

அண்மையில் நித்யாவின் எதிர்வீட்டில் வசித்து வரும் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் தனது காரை நித்யா சேதப்படுத்தியுள்ளதாகக் கூறி காவல்துறையில் புகார் கொடுத்திருந்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் நித்யாவை கைது செய்தனர். பிறகு ஜாமீனில் வெளிவந்தார். வெளிவந்தவுடன் பாஜவில் இணைந்தார். 

 

இந்த நிலையில் நித்யா மீது கடன் தொடர்பான விஷயத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாதவரத்தை சேர்ந்த கலைச்செல்வன் என்பவர் புதிதாக தொழில் தொடங்க எண்ணியுள்ளார். அதற்காக நித்யாவிடம் ரூ. 94 ஆயிரம் கடனாக பெற்றுள்ளார். அதில் ரூ. 52 ஆயிரம் பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டு மீதமுள்ள ரூ. 42 ஆயிரம் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கலைச்செல்வனுக்கும் நித்யாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

 

கடந்த 9 ஆம் தேதி கலைச்செல்வன் வீட்டிற்கு சென்று பணத்தைத் திருப்பிக் கேட்டுள்ளார் நித்யா. அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. பின்பு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக சொல்லப்படுகிறது. இதில் காயமடைந்த இருவரும் கொளத்தூரில் உள்ள பெரியார் நகர் மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

 

இதைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் மாதவரம் போலீஸார் நேரில் சென்று இருவரிடமும் விசாரணை நடத்தினர். பிறகு இந்த சம்பவம் தொடர்பாக நித்யாவும் போலீசில் புகார் அளித்துள்ளார். கலைச்செல்வனும் புகார் அளித்துள்ளார். அவர்கள் இருவரது புகாரையும் பெற்றுக் கொண்ட போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

 

Next Story

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பாகுபலி நடிகர்!

Published on 30/06/2021 | Edited on 30/06/2021
bnfxhshsh

 

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தென்னிந்திய மொழிகளிலும் பிரபலமாகி வருகிறது. இதில் தெலுங்கு பிக்பாஸ் முதல் சீசனை ஜுனியர் என்டிஆர், இரண்டாவது சீசனை நானி, மூன்று மற்றும் நான்காவது சீசன்களை நாகார்ஜுனா தொகுத்து வழங்கினர். இது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது பிக்பாஸ் ஐந்தாவது சீசன் விரைவில் ஆரம்பமாகவுள்ளது.

 

இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியைக் கடந்த இரண்டு வருடங்களாகத் தொகுத்து வழங்கிய நடிகர் நாகர்ஜுனா, படங்களின் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இந்த வருடம் பிக்பாஸ் நிகஸ்ச்சியில் இருந்து விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவருக்குப் பதிலாக 'பாகுபலி' புகழ் நடிகர் ராணா இதனை தொகுத்து வழங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.