Advertisment

பிக்பாஸ் நடிகைக்கு கொலை மிரட்டல் - சென்னை போலீசில் பரபரப்பு புகார்

நடிகர் கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளவர் நடிகை மீரா மிதுன். இவரது தாயாயர் சியாமளா சென்னை போலீஸ் கமிசனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

Advertisment

அதில், எனது மகள் தமிழ்செல்வி என்ற மீரா மிதுன், தானா சேர்ந்த கூட்டம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் மாடலிங் தொழிலும் செய்கிறார். 2016ல் தென்னிந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

meera mithun

இந்த நிலையில் சென்னையில் அழகிப்போட்டி நடத்த ஏற்பாடு செய்தார். அந்த போட்டியை நடத்த விடாமல் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் பல்வேறு இடையூறுகளை செய்தார். கொலை மிரட்டல் கொடுக்கும் வகையிலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றும் விதத்திலும் பல்வேறு அவதூறுகளை எனது மகளை பற்றி சமூக வலைதளங்களில் பரப்புகிறார்.

Advertisment

எனவே அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது மகள் பற்றி அவதூறு தகவல் வெளியிடாமல் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார். இந்த புகார் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

complaint mother Biggboss meera mithun
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe