Advertisment

லாஸ்லியாவை கடுமையாக எச்சரித்த பிக் பாஸ்...நடந்தது என்ன? 

தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 90 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களை கடந்து தற்போது மூன்றாவது சீசன் நடைபெற்று கொண்டிருக்கிறது. இரண்டு சீசன்களை போலவே மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி, மதுமிதா, கஸ்தூரி மற்றும் சேரன் இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். இதில் முகேன் நேரடியாக இறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ய்ப்பை பெற்றுள்ளார்.

Advertisment

big boss

இந்த நிலையில் ஒவ்வொரு போட்டியாளரும் யாரைக் காப்பாற்ற வேண்டும் என நினைக்கிறீர்கள் என்ற கேள்வியுடன் இந்தவாரம் நாமினேஷன் தொடங்கியுள்ளது. இதனையடுத்து கன்ஃபெஷன் அறைக்கு வந்த தர்ஷன், ஷெரின் மற்றும் சாண்டியைக் காப்பாற்ற நினைப்பதாக கூறுகிறார். அதனால் அவரை இரண்டு பச்சை மிளகாயை சாப்பிட வேண்டும் என்று பிக்பாஸ் கூறுகிறார். அதை ஏற்று இரண்டு பச்சை மிளகாயை சாப்பிட்ட தர்ஷன் கன்ஃபெஷன் அறையில் இருந்து வெளியேறுகிறார். பின்பு வந்த லாஸ்லியா நான் கவினை காப்பாற்ற நினைப்பதாக கூறுகிறார். அதற்கு பிக் பாஸ் தர்ஷனை பச்சை மிளகாய் சாப்பிட சொன்னது போல் லாஸ்லியாவையும் சாப்பிட சொல்கிறார். அதற்கு லாஸ்லியா பச்சை மிளகாயை சாப்பிட தயங்குகிறார். இதை கவனித்த பிக் பாஸ் இது நாமினேஷனுக்கான டாஸ்க் கொஞ்சம் சீரியஸாக இருங்க என்று எச்சரிக்கை விடுத்து அனுப்புகிறார்.

bigboss contest kamalhaasan losliya tv show
இதையும் படியுங்கள்
Subscribe