Skip to main content

“பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தடைசெய்ய தொடர்ந்து போராடுவேன்” -ராஜேஸ்வரி பிரியா திட்டவட்டம்!

Published on 19/09/2020 | Edited on 19/09/2020

 

BIG BOSS have to be ban


பிக் பாஸ் -4 ஆவது சீஸன் தொடங்கும் நிலையில், அதனைக் கண்டித்து அந்த நிகழ்ச்சியைத் தடை செய்யவேண்டும் என அனைத்து மக்கள் கட்சி சார்பாக அக்கட்சியின் நிறுவனத் தலைவர் மூ.ராஜேஸ்வரி பிரியா சென்னை காவல்துறை தலைமை இயக்குநருக்கு கடிதம் கொடுத்துள்ளார்.

 

அந்தக் கடிதத்தில், "ஆபாசத்தை மையமாகக் கொண்டு, கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த ஆண்டும் நடைபெறவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

 

இந்த நிகழ்ச்சி பல்வேறுவிதமான சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. கடந்த ஆண்டில் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மதுமிதா என்ற நடிகை தற்கொலை முயற்சி எடுத்தார். அதற்கு நாங்கள் காவல் துறையில் புகார் அளித்தோம். ஆனால், எந்தவித விசாரணையும் காவல்துறையால் மேற்கொள்ளப்படவில்லை.

 

ஒரே வீட்டிற்குள் ஆண்கள் பெண்கள் சேர்ந்து தங்குவதும், கழிப்பறை வரை கேமரா வைப்பதும், அரைகுறை ஆடைகள் அணிந்து உலா வருவதும், காதல் உறவுகளை வீட்டிற்குள் இருந்தே வளர்ப்பது என்பன போன்ற தவறான பல கலாச்சார அத்துமீறல்கள் இந்த நிகழ்ச்சியில் பொருத்தப்பட்டுள்ளது. இது இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் தவறான எண்ண ஓட்டத்தை பதிய வைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஏற்கனவே பாலியல் குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில் இது போன்ற நிகழ்ச்சிகளும் ஒரு விதத் தூண்டுதலாக அமைகிறது. 

 

பொதுவாகவே ரியாலிட்டி ஷோ என்பது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெறக்கூடிய ஒன்று. அப்படி இருக்கையில், இளைய சமூகத்தினரை பாதிப்படைய செய்யக்கூடிய ஆபாச நிகழ்ச்சியாக பிக் பாஸ் உள்ளதனால், இந்த நிகழ்ச்சி முற்றிலமாக தடை செய்யப்பட வேண்டும். 'சிகரெட் சோன்' என்ற ஒரு இடம் அமைக்கப்பட்டு அங்கே அவர்கள் புகைப்பிடிக்கச் செல்லலாம் என்றெல்லாம் நிகழ்ச்சியில் வலியுறுத்தப்படுகிறது. புகைப்பிடிக்கும் பழக்கத்தினை இளைஞர்கள் மத்தியில் அதிகப்படுத்துவதற்கான வாய்ப்பாக இது உள்ளது. 

 

Ad

 

சிறிய குழந்தைகள் முதல் இந்த நிகழ்ச்சியைப் பார்க்க தொடங்கிவிட்டார்கள். கூடதலாகக் கரோனா காலகட்டத்தில், 16 பேர் சேர்ந்து ஓர் இடத்தில் தங்கும் நிகழ்ச்சி தேவையில்லாத ஒன்றாகும். இது மக்கள் இடத்தில் தவறான முன் உதாரணமாக அமையும்.

 

எனவே, இந்த நிகழ்ச்சியைத் தடை செய்ய காவல்துறை இயக்குநர் அவர்கள் கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று அனைத்து மக்கள் அரசியல் கட்சி சார்பாகப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

 

மேலும், இதுகுறித்து நம்மிடம் பேசிய அவர், "இந்நிகழச்சியைத் தடை செய்ய தொடர்ந்து போராடுவேன்" எனத் தெரிவித்தார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இது தான் பிக்பாஸின் புது ஹவுஸா! (படங்கள்)

Published on 03/10/2023 | Edited on 03/10/2023

 

 

 

கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி, தற்போது 7வது சீசனை தொட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது புதுசாக அறிமுகப்படுத்தும் பிக் பாஸ், இந்த முறை இரண்டு வீடுகளாக அமைத்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். அந்த வீட்டின் பிரத்தியேக புகைப்படங்கள்...

 

 

Next Story

பிக் பாஸ் சீசன் 7: டஃப் கொடுப்பார்களா இந்த நால்வரும்?

Published on 03/10/2023 | Edited on 03/10/2023

 

big boss 7 update

 

கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி, தற்போது 7வது சீசனை தொட்டுள்ளது. சமீபத்தில் கோலாகலமாகத் தொடங்கிய இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன், இந்த முறை வித்தியாசமாக 2 வீடுகள் என ரசிகர்களை வியக்க வைத்துள்ளனர். இந்த நிலையில் போட்டியாளர்களாக இவர் வருவார், அவர் வருவார் எனவெல்லாம் யூகிக்கப்பட்டது. இறுதியில் இவரெல்லாம் வந்திருக்கார்களே என நினைக்க வைத்த கூல் சுரேஷ், பவா செல்லத்துரை, யுகேந்திரன், வனிதா மகள் ஜோவிகா, ஆகிய நால்வரைப் பற்றி பார்ப்போம்.  

 

big boss 7 update

 

கூல் சுரேஷ் - சில திரைப்படங்களில் சிறிய வேடத்தில் நடித்துள்ள இவர் பெரும்பாலும் நெகட்டிவ்ஷேட் உள்ள கதாபாத்திரத்தையே ஏற்று நடித்திருக்கிறார். மேலும் சிம்புவின் தீவிர ரசிகரான இவர், வெந்து தணிந்தது காடு படம் வெளியான சமயத்தில் பல பேட்டிகளில் நகைச்சுவையாக பேசி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் இவர் கொடுக்கும் கவுண்டர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதையடுத்து அதற்காகவே பல படங்களின் ப்ரோமோஷனில் கலந்து கொண்டார். அப்படி கலந்துகொண்ட ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில், தொகுப்பாளினிக்கு மாலை அணிவித்து சர்ச்சையில் சிக்கினார். பின்பு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். தொடர்ந்து தனது வேடிக்கையான செயல்கள் மூலம் ரசிகர்களை எண்டர்டெயின் செய்த கூல் சுரேஷ் இதிலும் அதை தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

big boss 7 update

 

பவா செல்லத்துரை - எழுத்தாளராக இலக்கியத் துறையில் பயணிக்கும் இவர், கதை சொல்லியாக மிகவும் பிரபலமானவர். திருவண்ணாமலையை சேர்ந்த இவர், முற்போக்கு பேசும் கதாபாத்திரத்தில் ஜோக்கர் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்பு பேரன்பு, சைக்கோ என பல்வேறு படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக ஜெய் பீம் படத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவராக அக்கதாபாத்திரத்திக்கு சரியாக பொருந்தியிருப்பர். பிக் பாஸ் வீட்டிற்குள் கையில் ஒரு புத்தகத்தோடு நுழைந்து பலரது கவனத்தை பெற்ற இவர், தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தை பெறுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

 

big boss 7 update

 

யுகேந்திரன்  - பாடகர் மலேசியா வாசுதேவனின் மகனான இவர் தந்தையை போல் பல பாடல்களை பாடியுள்ளார். மேலும் அவரை போலவே பல படங்களில் நடித்தும் உள்ளார். அஜித்தின் 'பூவெல்லாம் உன் வாசம்' விஜய்யுடன் யூத், பகவதி, திருப்பாச்சி என ஏராளமான படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் வருவது போல் நிகழ்ச்சியிலும் முக்கிய போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

big boss 7 update

 

வனிதா மகள் ஜோவிகா - நடிகையாக சினிமாவில் ஒரு ரவுண்டு வந்த வனிதா, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டார். இவர் கலந்து கொண்ட சீசனில் கடும் போட்டியாளராக இருந்தார். இந்த நிலையில் அவரது மகளான ஜோவிகா, 18 வயதை கடந்துவிட்ட நிலையில் அம்மாவை போல் கடும் போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.