Skip to main content

பிக் பாஸ் வனிதாவுக்கு அடித்த ஜாக்பாட்... மீண்டும் களத்தில் இறங்கிய வனிதா... என்ன ஒரு ஒற்றுமை!

Published on 23/10/2019 | Edited on 23/10/2019

தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். கடந்த இரண்டு சீசன்கள் போலவே மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பிக் பாஸ் மூன்றாவது சீசனில் முகேன் டைட்டில் வின்னர் பட்டத்தை பெற்றார். இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற போட்டியாளர்களுக்கு பட வாய்ப்புகளும், மக்கள் மத்தியில் எளிதாக பிரபலமாகவும் ஆகிவிட முடியும். இந்த நிகழ்ச்சியை சுவரியாசமாக கொண்டு சென்றதில் மிகவும் முக்கிய பங்கு வகித்தவர் நடிகை வனிதா. நடிகை வனிதா பிரபல சினிமா நடிகர் விஜயகுமாரின் மகள் ஆவார். 
 

vanitha



நடிகை வனிதா தமிழ் சினிமாவில் சந்திரலேகா படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர். நடிகர் விஜய், ராஜ்கிரண் மற்றும் சில நடிகர்களுடன் நடித்தவர். அதோடு தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சில பிரச்னை காரணமாக சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கி இருந்தார். தற்போது சந்திரலேகா என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் களமிறங்கியுள்ளார். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் சினிமாவில் அறிமுகமாகும் போது சந்திரலேகா படம் மூலம் வந்தார். சின்னத்திரையிலும் சந்திரலேகா என்ற தொடரின் மூலம் என்ட்ரி கொடுக்க உள்ளார். இந்த தொடரை ஆனந்தபாபு இயக்குகிறார். சமீபத்தில் வனிதா வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.   

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘டிஜிட்டல் இந்தியா’ - அதிர்ச்சி அனுபவத்தைப் பகிர்ந்த நடிகை

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
hina khan beggar incident

பாலிவுட்டில் தொலைக்காட்சி தொடர்களிலும், நிகழ்ச்சிகளிலும் மற்றும் ஆல்பம் வீடியோக்களிலும் நடித்து வருகிறவர் நடிகை ஹினா கான். மேலும் டேமேஜ்டு 2 வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் யாசகர் ஒருவரின் செயல் குறித்து பதிவிட்டிருந்தார். அது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அந்தப் பதிவில், “நான் சிக்னலில் கிரீன் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நபர் என் கார் கதவை தட்டினார். கொஞ்சம் பணம் கொடுத்து உதவ முடியுமா என்று கேட்டார். என்னிடம் பணம் இல்லை என்றேன். வீட்டில் தம்பி, தங்கைகள் இருக்கிறார்கள். தயவு செய்து ஏதாவது உதவுங்கள் என்றார். நான் மீண்டும் என்னிடம் பணம் இல்லை. ஸாரி என்றேன். கூகுள் பே இருக்கு மேடம். அந்த நம்பர் தருகிறேன் என்றார். அது எனக்கு அதிர்ச்சியளித்தது. 

பின்பு அவருக்கு கூகுள் பே மூலம் பணம் அனுப்ப முயற்சிக்கும் போது, ஒரு வாரத்துக்கான ரேஷன் பொருட்கள் வாங்க பணம் அனுப்புங்க மேடம் என்றார். இது என்னை மேலும் அதிர்ச்சியாக்கியது. டிஜிட்டல் இந்தியா தற்போது சிறந்ததாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

குழந்தை விவகாரம் - நடிகை கைது!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
sonu srinivas.gowda child issue

பெங்களூரைச் சேர்ந்தவர் கன்னட நடிகை சோனு ஸ்ரீநிவாஸ் கௌடா. கன்னட பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டதன் மூலமும் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டும் பிரபலமானவராக இருந்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ரீல்ஸ் வீடியோ வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் அவர், அவ்வப்போது ஒரு பெண் குழந்தையுடன் இருக்கும்படியும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வந்தார். அந்த குழந்தையை அவர் தத்தெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் அக்குழந்தையை சட்ட விரோதமாக சோனு ஸ்ரீனிவாஸ் கௌடா தத்தெடுத்துள்ளதாக குழந்தைகள் நலத்துறை சார்பில் காவல் துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்குழந்தையின் அடையாளத்தை நடிகை வெளிப்படுத்தியதாகவும், மார்ச் மாதம் தேர்வு இருந்தும் குழந்தையை பள்ளிக்கு அனுப்பாமல் இருந்ததாகவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு குழந்தை தத்தெடுக்கும் நடைமுறையில், குழந்தைக்கும் தத்தெடுப்பவருக்கும் 25 வயது இடைவெளி இருக்க வேண்டும் என சட்டம் இருக்கும் நிலையில் அக்குழத்தைக்கு 8 வயது என்றும் நடிகைக்கு 29 என்றும் மனுவில் மேற்கோள்காட்டப்பட்டுள்ளது.  

இந்த புகாரின் அடிப்படையில் நடிகையை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவரை விசாரித்த போது, குழந்தை தத்தெடுக்கும் முறையை முழுமையாக பின்பற்றவில்லை என்று ஒப்புகொண்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. பின்பு நடிகையை 4 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது.