தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி கடந்த இரண்டு சீசனைப் போலவே சீசன் 3யும் மக்கள் மத்தியில் பிரபலமாக போய்க்கொண்டிருக்கிறது. பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி மற்றும் மதுமிதா இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். இதில் மதுமிதா தற்கொலைக்கு முயன்றதாக கூறி போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
இதனையடுத்து போட்டியிலிருந்து வெளியேறியதும் அபிராமி ஒரு பேட்டியில் அஜித் சார் படப்பிடிப்பு தளத்தில் அதிகம் உபயோகப்படுத்தும் வார்த்தை அனோஸ்கா தான் என்று கூறியுள்ளார். அனோஸ்கா அஜித் மகளின் பெயர். அபிராமி அஜித்துடன் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பது அறிந்த ஒன்று. மேலும் இவருக்கு அந்த படத்தில் கிடைத்த வரவேற்ப்பை பார்த்து மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக தெரிவித்தார். அதோடு அபிராமி மிஸ்.தமிழ்நாடு பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்படத்தக்கது.