Skip to main content

புகையிலை புற்றுநோய்க்கு எதிரான சைக்கிள் பயணம்! அசத்திய இளைஞர்கள்!

Published on 29/02/2020 | Edited on 29/02/2020

இந்திய நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதில் குறிப்பாக, வாய், குரல்வளை மற்றும் நுரையீரல் புற்றுநோய் ஏற்பட புகையிலை முக்கியக் காரணமாக இருக்கிறது.

கிட்டத்தட்ட 20 வகையான நச்சுப் பொருட்கள் புகையிலையில் பயன்படுத்தப் படுகின்றன. இப்படித் தயாராகும் புகையிலையை புகைத்தல், மெல்லுதல், நுகருதல் என எந்த வடிவத்தில் பயன்படுத்தினாலும், மிகக் கொடிய உயிர்க்கொல்லியாகவே அமையும். ஒவ்வொரு ஆண்டும் 9 லட்சம் பேர் புகையிலை பயன்படுத்துவதால் உயிரை விடுகின்றனர். புகைப்பழக்கம் உள்ளவர்களில் 89 சதவீதம் பேர் 18 வயதுக்குக் குறைந்தவர்கள் என்றும், இவர்களில் 50 சதவீதம் பேர் புகைப்பழக்கம் தொடர்பான பிரச்சனையால் உயிரிழக்கின்றனர் என்ற தகவல் அதிர்ச்சியைக் கிளப்புகிறது.

 

 Bicycle Ride Against Tobacco Cancer! Absolute Young People!


புகையிலையில் பயன்படுத்தப்படும் நிக்கோடின் என்ற நச்சுப்பொருள், புகைப் பழக்கத்திற்கு அடிமையாக்குகிறது. இதன் அளவு கொஞ்சம் அதிகரித்தாலும் கூட உயிருக்கே ஆபத்தாகக் கூட முடியும். வாழும் காலத்தை நரகமாக்கும் புகைப்பழக்கத்தைக் கைவிடுவதால் நீண்ட காலத்துக்கு ஆரோக்கிய வாழ்வை வாழமுடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இதை வலியுறுத்தி, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒளிரவன் அறக்கட்டளையின் அமைப்பாளர் குணசேசகரன் ஒருங்கிணைப்பில், தன்னார்வலர்களான N.விக்னேஷ், S.B.செல்வஆகாஷ்ராஜ், R.ராஜேஸ், S.ராகவேந்திரன், A.சந்தோஷ், D.வினோத்குமார், M.விஷ்ணுராஜ், , S.குருபிரசாத், H.பர்வேஷ் முஷரப், B.பத்மநாபன், V.கவிஎழிலன், S.அஸ்வின்பாலாஜி, R.ராகுல், G.பிரித்திவ்ராஜ், G.தமிழரசன், R.லோகேஷ்வரன, A.விஷ்ணுவரதன், M.பாலாஜி, S.கிஷோர், K.கிஷோர், R.ஸ்ரீராம்பிரசாத், S.ஸ்ரீவிக்னேஷ் உள்ளிட்ட 30 பேர் சைக்கிள் பயணம் மேற்கொண்டனர். இதில் 12 பேர் பள்ளி மாணவர்கள்.

 

 Bicycle Ride Against Tobacco Cancer! Absolute Young People!


திருவாரூர் மாவட்டத்தில் பிப்ரவரி 13-ந்தேதி தொடங்கிய இந்தப் பயணத்தில், 15-ந்தேதி அதிகாலை பாண்டிச்சேரி வந்தபோது ரயில்வே டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்துகொண்டு உற்சாகமூட்டினார். திண்டிவனம் தீயணைப்பு நிலையத்தில் வைத்து, பயணத்தில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு பதக்கம் வழங்கி கவுரவித்தார். அங்கிருந்து சென்னை அடையாறில் உள்ள வி.ஹெச்.எஸ். பல்நோக்கு மருத்துவமனையில் மாலை பயணம் நிறைவு செய்யப்பட்டது. செல்லும் வழியில் எல்லாம் புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் பிரச்சனைகளும், புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வையும் இளைஞர்கள் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

 

 Bicycle Ride Against Tobacco Cancer! Absolute Young People!

 

ஒளிரவன் அறக்கட்டளையின் குணசேகரன் நம்மிடம் பேசியபோது, “புகைப் பழக்கத்தால் அதற்கு அடிமையானவர்கள் மட்டுமின்றி, அருகில் இருப்பவர்கள் குறிப்பாக எந்தப் பாவமும் அறியாத குழந்தைகள் கடுமையாக பாதிப்பைச் சந்திக்கின்றனர். புகைப்பிடிக்கும் ஒவ்வொருவரும் ஒரு சிகிரெட்டுக்கு தங்கள் வாழ்நாளில் 14 நிமிடங்களை இழக்கின்றனர். ஆண்டுதோறும் புகையிலையால் அரசுக்குக் கிடைக்கும் வருமானமான ரூ.32 ஆயிரத்து 500-ஐ விடவும், புகையிலையால் ஏற்படும் நோய்களுக்கு செலவழிக்கும் தொகை (ரூ.37 ஆயிரத்து 500 கோடி) மிக அதிகம். ஆகவே,  அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும் இந்த வாழ்க்கையைத்தான் நாம் அனைவரும் தேர்ந்தெடுக்க வேண்டுமே தவிர, புகையிலையை அல்ல” என்று வலியுறுத்துகிறார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வரின் உத்தரவு; ஆய்வுக்குப் பிறகு 59 கடைகளுக்கு சீல்!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
59 shops sealed for selling banned tobacco products in Erode

முதல் - அமைச்சர் உத்தரவின்படி உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, வருவாய் துறை, மாநகராட்சி நிர்வாகம், போலீசார், பொதுப்பணித்துறை ஆகியோர் இணைந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா எனவும் பள்ளி கல்லூரி அருகிலும், கடைகளிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி ஈரோடு கலெக்டர் உத்தரவின்படி கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் உணவு பாதுகாப்பு துறையினர் கடைகளில் குழு ஆய்வு மேற்கொண்டதில் 59 கடைகளில் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த 59 கடைகளுக்கும்  சீல் வைக்கப்பட்டு ரூ. 12 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த கடைகளில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக அரசின் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை, சட்ட விதிகளின்படி சம்பந்தப்பட்ட துறையினர் கொண்ட குழுவினர் முன்னிலையில்  வெண்டிபாளையம் மாநகராட்சி உரக்கடங்கில் அழிக்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ. 2 லட்சத்து 73 ஆயிரத்து 956 ஆகும். பொதுமக்கள் உணவு மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தொடர்பான புகார்களுக்கு 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

Next Story

சினிமா பட பாணியில் சேஸிங்; 605 கிலோ மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Police seized tobacco worth 605 kg near Vellore

வேலூர் மாவட்டம் ஆந்திரா - தமிழ்நாடு மாநில எல்லைப் பகுதிகளான காட்பாடி கிறிஸ்டியன் பேட்டை, குடியாத்தம், பொன்னை சேர்க்காடு உள்ளிட்ட மாநில எல்லை பகுதிகளில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் உதவி ஆய்வாளர் கார்த்தி ஆகியோர் மாநில எல்லைப் பகுதியான  கிறிஸ்டியான் பேட்டை சோதனை சாவடியில் நேற்றிரவு வாகன தணிக்கை செய்துகொண்டிருந்தனர். அப்பொழுது அதிவேகமாக வந்த காரை நிறுத்த முயன்றனர்.

கார் நிற்போதுபோல் போக்கு காட்டிவிட்டு நிற்காமல் சென்றதால், உடனடியாக தங்களது வாகனத்தில் அந்த காரை விரட்டி சென்றனர். சுமார் 6 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று பள்ளிக்குப்பம் அருகே மடக்கி பிடித்தனர். கார் ஓட்டுனர் காரை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

போலீசார் காரில் சோதனை மேற்கொண்டபோது அதில் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு 3,80,000 மதிப்புள்ள 605 கிலோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூலிப், பான் மசாலா உள்ளிட்ட குட்கா பொருட்கள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். குட்கா பொருட்கள் மற்றும் 15 லட்சம் மதிப்புள்ள காரை பறிமுதல் செய்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

கார் பதிவெண்ணை வைத்து அதன் உரிமையாளர் யார் என ஆய்வு செய்தபோது அது, போலி நம்பர் பிளேட் கொண்ட வாகனம் எனத் தெரியவந்ததை அடுத்து போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். தப்பி ஓடிய அந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமா பட பாணியில் ஆறு கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்று காட்பாடி போலீசார் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.