Skip to main content

'சக்தி மசாலா' நிறுவன தம்பதிக்கு பீமரத சாந்தி விழா; நடிகர் சிவகுமார் பங்கேற்பு!

Published on 12/09/2021 | Edited on 12/09/2021

 

 

Bhimaratha Shanti Festival for 'Sakthi Masala' couple; Actor Sivakumar participates!


மசாலா பொருள்கள் தயாரிப்பில் தமிழ்நாட்டில் முன்னணியில் உள்ள நிறுவனமான 'சக்தி மசாலா' நிறுவனங்களின் தலைவர் டாக்டர் பி.சி.துரைசாமி- டாக்டர் சாந்தி துரைசாமி ஆகியோரின் பீமரத சாந்தி விழா, பெருந்துறை சென்னிமலை கவுண்டர் செல்லம்மாள் திருமண மண்டபத்தில் செப்டம்பர்- 8 மற்றும் செப்டம்பர்- 9 ஆம் தேதிகளில் நடந்தது.

 

இந்த வைபவத்தை, பழனி தண்டாயுதபாணி சுவாமி தேவஸ்தான அர்ச்சகர் செல்வசுப்பிரமணிய சிவாச்சாரியார் நடத்தி வைத்தார். அதிகாலையில் கோ பூஜை, சூரிய நமஸ்காரத்துடன் துவங்கி, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் போன்ற பல்வேறு பூஜைகள் நடந்தது. பின்னர் கலச தீர்த்த அபிேஷகம், கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை, கோதானம் மற்றும் பவளமணி தாரணம் ஆகியவை, தம்பதியர் இருவருக்கும் நடத்தப்பட்டது.

 

இதில் முக்கிய நிகழ்வான பவளமணி தாரணத்தை பிரபல நடிகர் சிவகுமார்- லட்சுமி சிவகுமார் தம்பதியர் அணிவித்தனர். அதைத் தொடர்ந்து, விழா மலரை நடிகர் சிவகுமார் வெளியிட்டார். அதேபோல், டாக்டர் எல்.எம்.ராமகிருஷ்ணன், அரிமா.என்.முத்துசாமி, டாக்டர் பி.ஜி.விஸ்வநாதன்- முத்துலட்சுமி விஸ்வநாதன், மூத்த வழக்கறிஞர் காந்தி, சாரதா காளிமுத்து, எஸ்.கே.ஆர்.குமார் மற்றும் குடும்பத்தில் உள்ள மூத்த உறுப்பினர்கள் தம்பதியரை ஆசீர்வாதம் செய்தனர்.

 

மேலும் முக்கிய பிரமுகர்களான ரமேஷ்- பிரபா தம்பதியினர், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி அலாவூதீன், பரணி பாலு தம்பதியினர், டாக்டர் கணபதி குடும்பத்தினர், கேசவன் தம்பதியினர், டாக்டர் அருணாதேவி, டாக்டர் மங்கள், டாக்டர் அஞ்சு தம்பதியினர், டாக்டர் செந்தில்வேலு தம்பதியினர் ஆசிர்வாதம் வழங்கினர்.

 

செப்டம்பர் 8- ஆம் தேதி அன்று மாலை சக்தி மசாலா நிறுவனங்களின் இயக்குனர் செந்தில்குமார், பெற்றோரைப் போற்றி உருவாக்கிய குறும்படம் தீபா, சுவாமி, சுருதி, செங்கதிர் வேலன் பாடிய பாடல்கள் மற்றும் துரைசாமி, சாந்தி துரைசாமி ஆகியோர் கடந்து வந்த பாதையை ஒளி, ஒலி காட்சியாக திரையிட்டனர்.

 

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை இவர்களது மகள் சக்திதேவி, மருமகன் இளங்கோ, மகன் செந்தில்குமார், மருமகள் தீபா, மைத்துனர் வேணுகோபால், கெளசல்யா தம்பதியினர், பேத்திகள் சுவாமி, சுருதி, பேரன் செங்கதிர் வேலன் ஆகியோர் செய்திருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.