Skip to main content

ஏமாற்றிய எம்.எல்.ஏ பேரனை சிறைக்கு அனுப்பிய பி.எச்.டி மாணவி!!

Published on 30/08/2018 | Edited on 30/08/2018

இன்றைய தலைமுறையினர் காதல் என்ற பெயருக்கே அர்த்தம் தெரியாமல் வெறும் உடல் சுகத்திற்காக மட்டுமே காதல் என்கிற போர்வையில் ஜாலியாக இருந்து கசந்த பின்பு அடுத்தவரிடம் தாவும் மனப்பான்மையுடன் தான் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் சிலர் விதி விலக்காக தன்னை ஏமாற்றியவனை எப்படியும் பலி வாங்கி விடவேண்டும் என்கிற மனபோக்கு தற்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் திருச்சி பி.எச்.டி படித்த மாணவியை சட்டம் படிக்கும் மாணவன் இரண்டு வருடம் காதலித்து விட்டு வேறு ஒரு பெண்ணை காதலித்தவனை சிறையில் அனுப்பிய சம்பவம் திருச்சியில் நடைபெற்று உள்ளது.

 

cheat


 

 

 

திருச்சி கொட்டப்பட்டு ஜீவா தெருவை சேர்ந்த தங்கராஜ்-பழனியம்மாள் ஆகியோரின் மகள் ரம்யா(26). பி.எச்டி பட்டம் பெற்றுள்ளார். திருவெறும்பூரை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏவும் தற்போது அதிமுகவில் இருந்து வரும் துரை என்பவரின் மகன் முத்துவின் மகன் ராம்பிரசாத் (26). திருச்சி அரசு சட்ட கல்லூரியில் படித்து வருகிறார். 

ராம்பிரசாத்தும் ரம்யாவும் தூரத்து உறவுமுறையாகும். இருவரும் 2 ஆண்டுகளாக காதலித்தனர். ராம்பிரசாத் ரம்யாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனால் இருவரும் நெருங்கி பழகினர். 

இதற்கிடையே ராம்பிரசாத் தான் படிக்கும் அதே சட்டக்கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவரை காதலித்ததால் ரம்யாவை திருமணம் செய்துகொள்ள மறுத்துள்ளார். இதனால் ரம்யா சட்ட கல்லூரிக்கு சென்று ராம் பிரசாத்தையும் சம்மந்தப்பட்ட மாணவியையும் கண்டித்துள்ளார். ஆனாலும் ராம்பிரசாத் ரம்யாவை திருமணம் செய்ய மறுத்து விட்டார். 

இந்நிலையில் 10 நாட்களுக்கு முன் ராம்பிரசாத்தை ரம்யா நேரில் சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் போலீசில் புகார் செய்வேன் என்று கூறியுள்ளார். அதன்படி திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் அமுதாராணி வழக்குப்பதிவு செய்து ராம்பிரசாத்தை தேடி வந்த நிலையில் அவர் தலைமறைவாகி விட்டார். 

ஆனால் ராம்பிரசாத் தினமும் சட்ட கல்லூரிக்கு வந்து செல்வதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருவெறும்பூர் எஸ்ஐ சத்யாதேவி சட்ட கல்லூரிக்கு சென்று வாசலில் ராம்பிரசாத் சட்டக்கல்லூரியில் இருந்து வெளியே வரும்வரை காத்திருந்து நண்பர்களுடன் வெளியே வந்த ராம்பிரசாத்தை கைது செய்தனர். 


பின்னர் திருவெறும்பூர் காவல் நிலையம் அழைத்து வந்து ராம்பிரசாத்திடம் மகளிர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். ஆனால் அவர் ரம்யாவை திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அதையடுத்து ராம்பிரசாத்தை திருச்சி 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் ரம்யாவை மருத்துவ பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். முன்னாள் எம்எல்ஏவின் பேரன் முனைவர் பட்டம் பெற்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டிய கணவன்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
husband cut the hand of his wife who was talking on video call

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர் (41 ) நெசவுத் தொழிலாளி இவரது மனைவி ரேவதி (வயது 35) இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் மூன்றாவது மகள் பள்ளியில் படித்து வருகிறார் .

இந்த நிலையில் ரேவதி கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பார்ப்பது, போட்டோ போடுவது, ஆன் லைன் நண்பர்களுடன் பேசுவது என அதிக அளவு நேரம் செலவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு  குடும்பத்தில் சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு ரேவதி வீடியோ காலில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். வீட்டுக்கு வந்த சேகரை கவனிக்காமல் மனைவி பேசிக்கொண்டே இருந்ததால் ஆத்திரம் அடைந்த சேகர் ரேவதியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில்  ஆத்திரமடைந்த சேகர் வீட்டிலிருந்த அருவாமனையை எடுத்தவர், இந்த கை தானே போன் எடுத்து பேசிக்கிட்டே இருக்குது, ரீல்ஸ் பார்க்கச்சொல்லுது, பேசச்சொல்லுது என ரேவதியின் வலது கையை வெட்டியுள்ளார்.

கையில் வெட்டுப்பட்டதால் அலறிய ரேவதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வெட்டப்பட்ட கை பலத்த சேதம் அடைந்த நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகரை அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், குடும்பத்தை கவனிக்காமல் எப்போது பார்த்தாலும் போன் வைத்துக் கொண்டு யாருடனாவது பேசிக்கொண்டே இருக்கிறார். அல்லது ஏதாவது பார்த்துக் கொண்டே இருக்கிறாள். இதைக்கேட்டதற்கு என்னை எடுத்தெறிந்து பேசினாள். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு வர ஆரம்பித்தது அந்த கோபத்தில் தான் வெட்டினேன் எனக் கூறியுள்ளார்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.