Skip to main content

800 ஆண்டுகளுக்கு முன்பே நதி நீர் இணைப்பு விஞ்ஞானி; தமிழக அரசு மரியாதை!

Published on 19/01/2022 | Edited on 19/01/2022

 

River water connection scientist 800 years ago ...!

 

மனித குலத்தில் அறிவியல், விஞ்ஞான பார்வை, புதிய கண்டுபிடிப்புக்கள், அதை செயல்படுத்துவது என பல சாதனைகளை செய்த வரலாற்றில் தமிழன் தொடக்கம் தொட்டே முதன்மையான பங்கு வகித்து வருகிறான்.

 

இந்தியா முழுக்க பசுமையாய் செழிக்க கங்கையையும் காவிரியையும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே இருந்து வருகிறது. ஆட்சிகள்தான் மாறியது. இதுவரை ஒவ்வொரு ஆற்றின் அருகே ஓடும் ஆறுகளையோ அல்லது வாய்க்கால்களைக்  கூட இணைக்கவில்லை. ஆனால் ஏறக்குறைய 800 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு தமிழன் நதி நீர் இணைப்பை செயல்படுத்தி பல லட்சம் மக்களுக்கும், விவசாய பூமிக்கும் பாசன நீர் வழங்கி தமிழ் சமூகம் போற்றத்தக்க ஒரு மாமனிதனாக வாழ்ந்துள்ளார் அவர். ஆம் அவர்தான் காளிங்கராயன்.

 

ஈரோடு மாவட்டம் பவானியில் இடதுபுறம் காவேரி ஆறும், வலது புறம் பவானி ஆறும் ஒடுகிறது. இதன் எல்லையான கூடுதுறை என்ற இடத்தில் பவானி ஆறு காவிரி ஆற்றுடன் கலந்து செல்கிறது. இப்படி பவானி ஆறு காவிரியுடன் கலக்கும் அரை கிலோ மீட்டருக்கு முன்பு ஒரு அணையை கட்ட முடிவெடுத்த காளிங்கராயன், அணை கட்டுவதற்கு முன்பே காவிரி ஆறு செல்லும் பகுதியையொட்டி வாய்கால் வெட்ட ஆரம்பித்தார். லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய விளைநிலம் பயன்பெறும் வகையில் பவானியில் இருந்து ஈரோடு மற்றும் கொடுமுடி வரை சுமார் 57 கிலோ மீட்டர் நெளிந்து, வளைந்து, மேடான பகுதிக்கும் நீர்ஏறிச் செல்வது போல் அமைத்து வாய்காலைவெட்டி முடித்து வாய்க்காலின் கடைகோடி நீர் கொடுமுடியை தாண்டி செல்லும் நொய்யல் ஆற்றில் கலக்கும் வகையில் உருவாக்கினார்.

 

ஏறக்குறைய பத்து பதினைந்து ஆண்டுகளாக இந்த வாய்கால் வெட்டப்பட்டிருக்கிறது. இதற்கான செலவு எல்லாவற்றையுமே காளிங்கராயனே செய்துள்ளார் என்பதுதான் ஆச்சியரியமான அபூர்வமான செய்தி. இறுதியில் வாய்க்கால் வெட்டப்பட்டு பவானியில் ஆற்றில் அணையை கட்டி அந்த இடத்திற்கு அணைக்கட்டு என பெயர் வைக்கப்பட்டு ஜனவரி 18ந் தேதி காளிங்கராயன் வெட்டிய வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. 

 

இப்படிப்பட்ட நீர் விஞ்ஞானியான காளிங்கராயனுக்கு அணைக்கட்டு பகுதியில் மணிமண்டபம், வெள்ளோடு பகுதியில் சிலை, ஒவ்வொரு வருடமும் ஜனவரி 18 அன்று அரசு சார்பில் மரியாதை என கலைஞர் முதல்வராக இருந்த போதிருந்தே நடந்துவருகிறது. இவ்வருடமும் அரசு சார்பில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி, அரசு கேபிள் வாரிய தலைவர் குறிஞ்சி சிவக்குமார் உட்பட எம்.எல்.ஏ.க்கள் பலரும் கலந்து கொண்டு மலர் மரியாதை செலுத்தினார்கள். 

 

செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கூறும்போது, "1283 ஆம் ஆண்டு இதே தினத்தில் பவானி ஆற்றை தடுத்து காளிங்கராயன் அணை கட்டி 57 கிலோ மீட்டர் தூரம் பாசன பகுதியை உருவாக்கி நொய்யல் ஆற்றில் வாய்க்காலை இணைத்தவர் காலிங்கராயன். எந்த விஞ்ஞான வளர்ச்சியும், தொலைத்தொடர்பு சாதனமும் இல்லாத காலத்திலேயே நதிநீர் இணைப்பை சாத்தியப்படுத்திக்காட்டியுள்ளார் காலிங்கராயன். அவரது புகழை போற்றும் வகையிலேயே காளிங்கராயர் தினம் தமிழக அரசால் கொண்டாடப்படுகிறது" என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.