Skip to main content

பவானி ஆற்று வெள்ளம் கட்டுக்குள் வருகிறது 

Published on 19/08/2018 | Edited on 19/08/2018
b

 

ஈரோடு மாவட்டத்தில் உள்ளது பவானிசாகர் அணை. நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் மழை மாயாறு மற்றும் பில்லூர் அணையிலிருந்து பவானிசாகர் அணைக்கு வருகிறது. ஏற்கனவே பவானிசாகர் அணை நிரம்பியதால் இங்கு வந்த உபரி நீர் 70 ஆயிரம் கண அடியும் அப்படியே அணையிலிருது திறந்து விடப்பட்டது. இதனால் தொட்டம் பாளையம், சத்தியமங்கலம், அரசூர், கொடிவேரி, அத்தானி மற்றும் பவானி ஆகிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான குடியிறுப்புக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர் மேலும் இந்த உபரி நீர் அப்படியே பவானி கூடுதுறையில் உள்ள காவிரி ஆற்றுடன் கலந்து சென்றது. 

 

இந்த நீர்வரத்து  நேற்று 50 ஆயிரம் கண அடி யாக குறைந்தது. இந்நிலையில்  மாயாறு மற்றும் பில்லூர் அணையிலிருந்து பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்து 29 ஆயிரம் கண அடியாக குறைந்தது இதனால் பவானிசாகர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டு 25 ஆயிரம் கண அடி நீர் வெளியேற்றப்படுகிறது இதனால் பவானி ஆற்றில் மெல்ல மெல்ல வெள்ளப்பெருக்கு கட்டுக்குள் வருகிறது. காவிரியுடன் கலக்கும் பவானி ஆறு 50 ஆயிரம் கண அடியிலிருந்து 25 ஆயிரமாக குறைந்து விட்டது. ஆனால் மேட்டூரிலிருந்து திறந்துவிடப்படும் காவிரி ஆறு 1.70 லட்சத்திலிருந்து தற்போது 2 லட்சம் கணஅடியாக அதிகரித்திருப்பதால் காவிரி கரையோர மாவட்டங்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாயம் நீடித்து வருகிறது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆனி மாத அமாவாசை: பவானி கூடுதுறையில் குவிந்த மக்கள்

Published on 17/06/2023 | Edited on 17/06/2023

 

nn

 

ஈரோடு மாவட்டம் பவானியில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவில் பின்பகுதியில் உள்ள இரட்டை விநாயகர் சன்னதி படித்துறையில் காவிரி, பவானி, கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது. ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வரும் இந்த கோவிலில் அமாவாசை தினத்தன்று உள்ளூர், வெளியூர் வெளி மாநில பக்தர்கள் வருகை தந்து தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம், எள்ளும் தண்ணியும் விடுதல், பிண்டம் விடுதல் என பல்வேறு வகையான பரிகார பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டு செல்வது வழக்கம்.

 

இந்நிலையில் இன்று ஆனி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு பரிகார பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தனர். ஆனி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு கோவிலின் பல்வேறு பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

 

 

 

Next Story

களையிழந்த தமிழகத்தின் காசி... சடங்குகளையும் விட்டுவைக்காத கரோனா!!

Published on 21/07/2020 | Edited on 21/07/2020
corona erode bavani

 

கடவுள் மட்டுமா கண்ணுக்கு தெரியாதது நானும்தான் என உலகம் முழுவதையும் ஆட்டிப்படைக்கிறது கரோனா வைரஸ், மனிதகுலம் அன்றாட வாழ்வில் நகர்ந்து வந்த வாழ்க்கை முறையை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டதுதான் இந்த வைரஸ் தொற்று. குறிப்பாக சடங்குகள் என்பது மனித சமூகத்தில் ஒன்றாக நடந்து வருகிறது. அமாவாசை, ஆடி ஒன்று, ஆடி பதினெட்டு, தைப்பொங்கல், தீபாவளி, சித்திரை ஒன்று என பல்வேறு நிகழ்வுகள் மனித சமூகத்தில் சடங்குகளாகவும், விழாக்களாகவும் தொடர்ந்து நடந்து வருகிறது.

 

அதில் ஒன்றுதான் ஆடி அமாவாசை, இந்த தினத்தில் தமிழகத்தில் ஆறுகள் உள்ள இடங்கள் கால்வாய்கள், குளங்கள், நீர்நிலைகள் உள்ள இடங்களில் மக்கள் பல்லாயிரம் பேர் கூடி அவர்களின் பெற்றோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம், ஏறக்குறைய தமிழ்நாடு முழுக்க பல லட்சக்கணக்கான மக்கள் தங்களது சடங்குகளை செய்து வந்தார்கள். ஆனால் இந்த வருடம் அப்படி செய்ய முடியவில்லை அதற்கு காரணம் இந்த வைரஸ் தொற்று தான்.

 

corona erode bavani


அரசாங்கம் மக்கள் கூடக்கூடாது நீர்நிலைகளில், கோயில்களில் மக்கள் கூட்டம் எதுவும் கூடாது என தடை போட்டுள்ளது. இதன் காரணமாக ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து வந்த இந்தசடங்குகள் அனைத்தும் நடைபெற முடியாமல் தடுத்து விட்டது கரோனா வைரஸ். குறிப்பாக தமிழகத்தில் இரண்டாவது காசி என்றால் அது பவானி கூடுதுறை. இங்கு ஒவ்வொரு ஆடி அமாவாசை தினத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள் ஆனால் இன்று, "யாரும் உள்ளே வராதீர்கள்" என பூட்டு போட்டு விட்டனர் காவல்துறையினர். வேறு வழியில்லாமல் யாரும் அங்கு செல்லவில்லை இதனால் அந்த இடமே களையிழந்து காணப்பட்டது. ஆக மனித மனங்களில் சாமி மற்றும் சடங்குகளின் நம்பிக்கைகளை, உள்ளார்ந்த விஷயங்களை முற்போக்கு பிரச்சாரம் செய்து தடுத்தாலும் நடக்காத அந்த நிகழ்வுகளை இந்த வைரஸ் தொற்று நிறுத்திவிட்டது என கவலையோடு தெரிவிக்கிறார்கள் பொதுமக்கள்.