பாரதியாரின் 140வது பிறந்தநாளையொட்டி கடற்கரை சாலையில் உள்ள பாரதியார் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து பாரதியாரின் 140வது பிறந்தநாளை முன்னிட்டு வானவில் பண்பாட்டு மையம் சார்பில் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் அருகே இருந்து ‘ஜதி பல்லக்கு’ ஊர்வலம் நடத்தப்பட்டது. இதனை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், முன்னாள் அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு துவக்கிவைத்தனர்.

Advertisment