Skip to main content

நெருப்புக் கோட்டையைக் கலகலப்பாக்கிய திருவிழா!

Published on 12/12/2021 | Edited on 12/12/2021

 

 

BHARATHIYAR BIRTHDAY CELEBRATION AT THOOTHUKUDI DISTRICT

 

முண்டாசுக்கவி பாரதி அவதரித்த நெருப்புக்கோட்டையான எட்டயபுரத்தைக் கலகலப்புத் திருவிழா வாக்கியிருக்கிறது அவரின் 140- வது பிறந்தநாள் விழா.

 

டிச. 11 அன்று எட்டயபுரமே திருவிழாக் கோலத்திலிருந்தது. அன்றைய தினம் நக்கீரன் குழுமத்தின் இனிய உதயம் நடத்திய பாரதியின் பிறந்த நாள் திருவிழாவிற்கு பாராளுமன்ற எம்.பி.கனிமொழி அமைச்சர்களான கீதாஜீவன், அன்பில் மகேஷ், தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.க்களான மார்க்கண்டேயன் சண்முகையா, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், எஸ்.பி. ஜெயக்குமார் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் திரளாகக் கலந்து கொண்ட விழா மண்டபம், கொள்ளவையும் தாண்டியிருந்தது.

BHARATHIYAR BIRTHDAY CELEBRATION AT THOOTHUKUDI DISTRICT

நக்கீரன் ஆசிரியர் கோபாலின் தலைமை ஏற்பில் இனிய உதயம் பொறுப்பாளர் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் வரவேற்புரையை அனல் வீச்சில் கொண்டு சென்றார்.

 

தாய் மொழியான தமிழ் மொழிக்கு தனி மரபு. செந்தமிழ் நாடெனும் போதினிலே என இதயம் போன்று வாழ்ந்த பாரதி. அருப்புக்கோட்டையின் நெருப்புக்கோட்டைக்கு வந்திருக்கிறோம் என தன் உரையில் வந்திருந்தோரைத் தனது கவி நடையில் வரவேற்றார் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன்.

 

சிறப்புப் பேரூரையாற்றிய பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "மாணவ, மாணவிகளை இந்த நேரத்தில் சந்தித்தபோது மனம் பூரிக்கின்றது. அவர்களின் தமிழ்பற்று கண்டு பெருமகிழ்ச்சியடைகிறேன். உங்களைப்பார்த்த போது பாரதி மறையவில்லை. அவர் இன்னும் எழுதிக் கொண்டுதானிருக்கிறார் என்பதை நான் உணர்கிறேன்" என்று பாரதிவேடம் பூண்டு அணிவகுத்த சின்னஞ்சிறார்களை பாராட்டிக் கௌரவித்தார்.

BHARATHIYAR BIRTHDAY CELEBRATION AT THOOTHUKUDI DISTRICT

ஆண்டாள் பிரியதர்ஷினியின் வரவேற்புரையின் கவி அனலைக் கிளப்பியது. வேடிக்கை மனிதர் போல நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ, பாரதி இங்கே மறு ஜென்மமெடுத்து நிற்கிறான். இது எங்கள் மண். இந்த மேடை எனது சொர்க்கம். ஒரு பத்திரிக்கைத்துறையிலிருந்து இந்த உலகிற்கு என்ன செய்ய வேண்டும். நடப்புகளை, உண்மைகளை வெளியுலகிற்கு உணர்த்திக் கொண்டிருக்கிற நக்கீரன் கோபால். இளைய பாரதிகளை அடையாளம் கண்டு மேடை ஏற்றுகிறார். அவர் பள்ளி மாணவ, மாணவிகளுக்காக இந்த விழாவினை நடத்துகிறார். 

 

கவிதை எழுதுவது எளிது. ஆனால் அதுபோல் வாழவேண்டும் என்றவன் பாரதி. தன் பிள்ளை மற்றும் குடும்பத்தாரிடம் ஒரு பழைய டிரங்க் பெட்டியைத் திறந்து காட்டிய பாரதி, இவைகள் ஏடல்ல. கவிதைகள். ஒவ்வொன்றும் இரண்டு லட்சம். இரண்டாயிரம் கவிதைகள் உள்ளன என்றான். அது இரண்டுலட்சமல்ல இன்றைக்குப் பலகோடி. இனிவரும் காலம் பாரதி சொன்னதைப் போல பெண்களுக்கான காலமாக மாறும் என்று முடித்தபோது அரங்கம் கரவொலியால் அதிர்ந்தது.

BHARATHIYAR BIRTHDAY CELEBRATION AT THOOTHUKUDI DISTRICT

ஐ.பி.எஸ். அதிகாரியான மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளரான ஜெயக்குமார், பாரதி பற்றிய அரிய விஷயங்களை எடுத்துரைத்தவர், விடுதலைக் கவி மட்டுமல்ல. பெண் விடுதலைக் கவி. நூறு ஆண்டுகளுக்கு முன்பு அடிமை சமுதாயமான விடுதலை பற்றி எழுதியது இன்று நடக்கிறது. இன்று அனைத்துத் துறையிலும் பெண்கள். சட்டத்தின் மூலம் பெண்களுக்கெதிரான குற்றங்களை முழுவதும் களைய முடியாது. அதற்கு விழிப்புணர்வு வேண்டும் என்று லாஜிக்காகவும் பேசி அப்ளாஸ் வாங்கினார்.

 

விளாத்திகுளம் எம்.எல்.ஏ.வான மார்க்கண்டேயன் தன் ஜனரஞ்சக உரையில், "காணிநிலம் வேண்டும் பராசக்தி காணிநிலம் வேண்டும். அது காணுமிடமெல்லாம் பொன் விளைய வேண்டும் பராசக்தி என்றான் பாரதி. பராசக்தி எழுதிய தலைவர் கலைஞரின் மகளான கனிமொழி வானம் பார்த்த, இந்த மண்ணை சிறக்கச் செய்யவேண்டும் என டைமிங்காகச் சொன்னது அனைவரையும் நிமிரச் செய்தது" என்றார். 

BHARATHIYAR BIRTHDAY CELEBRATION AT THOOTHUKUDI DISTRICT

ஐ.ஏ.எஸ். அதிகாரியான மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், பாரதி போன்ற இந்த இளம் பாரதிகள், பாரதி இப்படித்தான் கவியிலும் கம்பீரமாக இருப்பதை உணர்த்துகிறார்கள் என்று பேசிக் கொண்டிருந்தபோது, நக்கீரன் ஆசிரியர் ஆட்சியரைப் பார்த்து தன் இரு கைகளால் தன் கன்னத்தைக் காட்டி சைகை செய்து, அவர் போட்டிருந்த மாஸ்க்கைக் கழட்டி விட்டுப் பேசும் படி கேட்டுக் கொள்ள, கலெக்டரோ அதனை வேறு மாதிரியாகப் புரிந்து கொண்டு, அவரின் மீசையைத் தான் சைகையால் குறிப்பிடுகிறாரோ எனப் புரிந்தவர், எனக்கு மீசை கிடையாது என்று ஆட்சியர் யதார்த்தமாகச் சொல்ல, மண்டபமே புன்னகையால் கலகலப்பாகி நல்லதொரு ரிலாக்ஸ் மூடிற்குவர, அதன் பிறகே, கலெக்டரிடம் மாஸ்க்கைக் கழட்டிவிட்டுப் பேசுங்கள் பார்வையாளர்களுக்கு தெரியட்டும் என்றேன் என்றார் ஆசிரியர் புன்னகையோடு. தலைமையுரையாகப் பேச வந்த நக்கீரன் ஆசிரியருக்கு சால்வை அணிவித்து வரவேற்றார் அமைச்சர் கீதாஜீவன்.

 

வரும் போதே விருந்தாளியா யிங்க வந்த எனக்கு தலைமை கிடைக்கும்னு நெனைக்கல்ல. வெள்ளம் நிறைந்த தூத்துக்குடி இன்று க்ளீன். கீதா ஜீவன்ட்ட சொன்ன உடனே. அண்ணே சரிபண்ணியாச்சு. சொன்ன உடனே நடப்பு. ஒரு ஆட்சி மாற்றம் என்பது இது தான். பாரதி வேடம் புனைந்து அனல் பார்வையோடும் கம்பீர மீசையோடும் வந்த இளம் பாரதிகளை வாழ்த்தியவர். டைமிங்காக, ஆட்சியருக்கு மீசையில்லதாம். ஆனா பாரதி பற்றிப் பலகருத்துக்களைக் ஆட்சியரும், எஸ்.பி.யும் பேச்சுல அடிச்சிப் பின்னியெடுக்குறாங்க. பல வருடம் கழிச்சி ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின்பு அமைச்சர் பெருமக்கள் இந்த இளம் பாரதி பிள்ளைகளை மேடை ஏற்றியது அந்தப் பிள்ளைகளுக்குப் பெரிய அங்கீகாரம் என படு ஷார்ப்பாகவும் கிராமிய நடைமுறையில் இயல்பாக நக்கீரன் அசிரியர் பேசி முடிக்க மண்டபத்தைச் சற்றிக் கைத்தட்டல்கள்.

BHARATHIYAR BIRTHDAY CELEBRATION AT THOOTHUKUDI DISTRICT

மகளிர் உரிமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சரான கீதாஜீவன், மாணவ, மாணவிகளின் பாரதி வேடம், வேடம் மட்டுமல்ல அது அந்தக் குழந்தைகளை சிந்தனையாளர்களாக மாற்றிய வேடம். சட்டங்களை இயற்றவும் பட்டங்களை ஆள்வதும் பாரினில் பெண்களே என்று பாடினான். அதான் இன்று நடக்கிறது. சாதி இரண்டொழிய வேறில்லை. ஆண், பெண் என இரண்டே சாதி என்று அன்றே சொன்னான் பாரதி என்றார் முத்தாய்ப்பாக.

 

இது வானம் பார்த்த பூமிதான். ஆனால் மானம் காத்த பூமி. பாரதியின் கனவைப் போன்று கல்விச் சாலைகளை அமைத்தவர் தலைவர் கலைஞர். காக்கை குருவிகள் எங்கள் ஜாதி. காட்டு மிராண்டிகள் இரண்டாம் சாதி என்றவன், தான் விரும்பிய தன்வாழ்க்கைக் கட்டுரையை எழுதும் போதுதான் அவனது மூச்சு அடங்கியது என்று அரிய விஷயங்களை வெளிப்படுத்தினார் தமிழ் மற்றும் தொல்லியல் ஆராய்ச்சித்துறை அமைச்சரான தங்கம் தென்னரசு.

BHARATHIYAR BIRTHDAY CELEBRATION AT THOOTHUKUDI DISTRICT

அனைவருக்கும் பாரதிபிறந்த நாள் வாழ்த்துக்கள் என தம் பேச்சிலும் புரட்சியை ஏற்படுத்திய கனிமொழி எம்.பி. இரண்டாயிரம் பேர் கவிதை எழுதினார்கள். அதில் பரிசு பெற்றவர்களைத் தேர்வு செய்வது பெரிய விஷயம். பாரதிபற்றிப் பேசாத விஷயங்களையும் இங்கு பேசினார்கள். வெளிநாடு செல்லுங்கள். அங்குள்ள கலைச்செல்வங்களை இங்கு கொண்டு வந்து சேருங்கள் என்றவன் பாரதி. உங்கள் கனவு மெய்ப்பட வேண்டும். மாணவச் செல்வங்களின் மனதில் ஆயிரம் கனவுகள். அடுத்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நீங்கள் தான் என்ற கனவிருக்கவேண்டும். ஏனெனில. எமக்குத் தொழில் கவிதை. என் கனவு. அதை நோக்கித்தான் செல்வேன் என விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்தான். அதைப் போலவே பள்ளி மாணவர்கள் எத்தனை தடை வந்தாலும் உங்களுக்குரிய கொள்கைகளுக்கு தடை இருக்கிறது. அதில், நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும். தடையை வென்று காட்ட வேண்டும் என்று அழுத்தமாகப் பேசி மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.

 

விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் போன்றவைகளை பதியப்பட்ட ஆடியோ மூலம் இசைக்காமல், தேர்ந்த பாடகர்களைப் பாட வைக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவு முதன் முதலாக விழா நிறைவாக இங்கே மாணவிகள் பாடிய தேசிய கீதத்துடன் நடந்தேறியது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிறுமி பலியான வழக்கு; வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Shocking information that came out on A case where a girl was incident on her birthday

பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா பகுதியைச் சேர்ந்தவர் 10 வயது சிறுமி மான்வி., கடந்த மார்ச் 24ஆம் தேதி மான்வி தனது 10 வது பிறந்தநாளை கொண்டாடினார். அதற்காக, மான்வியின் தந்தை பாட்டியாலாவில் உள்ள பேக்கரியில் ஆன்லைன் மூலம் கேக் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.

அதன்படி, விநியோகிக்கப்பட்ட கேக்கை, மான்வி தனது குடும்பத்தினருடன் சாப்பிட்டு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். கேக்கை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, சிறுமி மான்விக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் வாந்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிறுமி மான்வி சிகிச்சை பலனின்றி, தன் பிறந்த நாளிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, சிறுமி மான்வி பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் குடும்பத்தினர், கேக் ஆர்டர் செய்த பேக்கரி மீது போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், ஆர்டர் செய்யப்பட்ட கேக்கின் மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்தி வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையின் முடிவானது தற்போது வெளியாகியுள்ளது. அதில், சிறுமி மான்வி சாப்பிட்ட கேக்கில் அளவுக்கு அதிகமான சாக்கரின் எனப்படும் இனிப்புச்சுவை பயன்படுத்தப்பட்டிருந்ததால், மான்வி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பேக்கரி கடை உரிமையாளரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் வைரமுத்து சந்திப்பு!

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Vairamuthu meeting with Tamil Nadu Chief Minister M.K.Stalin

தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலினின் 71வது பிறந்தநாள் இன்று (01.03.2024) கொண்டாடப்பட்டது. இதற்காகப் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் நலத்திட்ட உதவிகள், உணவு வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். தி.மு.க. தலைமை சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிஞர் அண்ணா, கலைஞர் மற்றும் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கோபாலபுரத்தில் உள்ள கலைஞரின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.

அதே சமயம் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி. வேல்முருகன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம். காதர் மொகிதீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் என். கண்ணையா ஆகியோர் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.

அதேபோன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளுக்கு பல்வேறு தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்துகளை சமூக வலைத்தளங்கள் வாயிலாகப் பதிவிட்டு வருகின்றனர். அதன்படி பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

Vairamuthu meeting with Tamil Nadu Chief Minister M.K.Stalin

மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மாரியென வாழ்த்துகளைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி. பேரன்பொழுக என்னை வாழ்த்த வந்த உடன்பிறப்புகளே... தலைமைத் தொண்டனாய் என்றும் உங்களுக்குத் தொண்டாற்றுவதே நான் செய்யும் நன்றியெனக் கடமையாற்றுவேன்” எனக் குறிப்பிட்டு காணொளி ஒன்றையும் இணைத்திருந்தார். இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலினை கவிப்பேரரசு வைரமுத்து நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.