style="display:inline-block;" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9546799378">
ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்பதனை வலியுறுத்தி தடை அதை உடை என்ற தமிழ்த்திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், திரைப்பட இயக்குநர் அமீர், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
style="display:inline-block;" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9546799378">
விழாவில் பேசிய பாரதிராஜா, ஆங்கிலேயர் காலத்தில் இதுபோன்ற அடக்கு முறை இல்லை. தற்போது அடக்குமுறை அதிகமாய் உள்ளது. இதனை அரசு நிறுத்திக்கொள்ள வில்லை என்றால் போராட்டங்கள் தீவிரமாகும். நான் எந்த அரசியல் கட்சியையும் சாரதவன். நான் இந்த மண்ணுக்கு, மொழிக்கு, கலாசாரத்திற்கு, சின்ன கீரல் வந்தாலும் இந்த பாரதிராஜா போராட்டம் நடத்துவான் என்றார்.