Skip to main content

  தேர்வு முடிவுகள் வந்தும் பாதிக்கப்படும் பாரதிதாசன் பல்கலைகழக மாணவர்கள்! 

Published on 29/06/2019 | Edited on 29/06/2019

 

திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 2019 ஏப்ரல் பருவத் தேர்வு முடிவுகள் படிப்படியாக வெளியிடப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழக இணைவு பெற்ற தன்னாட்சிக் கல்லூரி தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியான நிலையில் பல கல்லூரிகளில் முதுநிலை பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை முடிக்கப்பட்டு விட்டது.

 

b

 

இதனால் பல்கலைக்கழக இணைவு பெற்ற தன்னாட்சி அந்தஸ்து பெறாத கல்லூரிகளில் இளங்கலை பட்டம் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு முதுநிலை பட்டப் படிப்பில் சேருவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

காரணம் திருச்சியில் உள்ள பெரும்பாலான தன்னாட்சி கல்லூரிகளில் தேர்வு முடிவுகள் கடந்த மாதமே வெளியிட்டு உடனே முதுகலை பட்டபடிப்புகளுக்கான சேர்க்கையும் முடித்து வகுப்புகளும் துவங்கிவிட்டன. இதனால் பாரதிதாசன் பல்கலைகழகத்தில் படிக்கும் இளங்கலை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

 

வருங்காலங்களில் இத்தகைய பிரச்சனையை ஏற்படாமல் இருக்க பல்கலைக்கழக இளங்கலை தேர்வு முடிவுகளை ஒரே சமயத்தில் வெளியிடவும் அதுவரை முதுகலைப் பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கை நடக்காமல் இருக்க கல்லூரிகளுக்கு அறிவியல் பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 
 

சார்ந்த செய்திகள்

Next Story

பாரதிதாசன் பல்கலை. நுழைவுத் தேர்வில் தொழில் நுட்பக்கோளாறு; மாணவர்கள் அவதி

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Ph.D Online Entrance Test conducted by Bharathidasan University Technical disorder

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 2024 ஆவது கல்வி ஆண்டுக்கான முனைவர் பட்ட (பிஎச்டி) நுழைவுத் தேர்வு இணைய வழியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 57 வகையான பாடப்பிரிவுகளில் 1092 மாணவ, மாணவியர் தேர்வுக்கு ரூ.2,000 முதல் ரூ. 2,100 வரை கட்டணமும் செலுத்தி விண்ணப்பித்திருந்தனர். ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் புகல் 12.15 மணி வரை நுழைவு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் தேர்வாளர்களுக்கு தேர்வெழுத பிரத்யேக லாகின் ஐடி(ID) மற்றும் ரகசிய குறீயீடு உள்ளிட்டவைகளும் பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து திருச்சி மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து நுழைவு தேர்வு எழுத மாணவ,மாணவியர் பல்கலைக்கழக இணையதள முகவரியில் லாக் இன் செய்தனர். ஆனால் பல்கலைக்கழக இணையதளம் செயல்படவில்லை. இதனால் ஏராளமான மாணவர்கள் நுழைவு தேர்வு எழுத முடியாமல் அவதிக்குள்ளாகினர். 

பின்னர் தொடர்ந்து பல முறை முயற்சி செய்தும் பலன் இல்லை. இதனால் மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தொடர்பு கொண்டு கேட்டபோது சர்வரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இணையதளம் செயல்படவில்லை என்று தெரிவித்தனர்.

இது தொடர்பாக பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சீனிவாச ராகவன் கூறுகையில், “ஞாயிற்றுக்கிழமை முனைவர் பட்ட (பிஎச்டி) நுழைவுத் தேர்வு இணைய வழியில் நடைபெற்றது. இதில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில மாணவர்களுக்கு தேர்வு எழுத முடியவில்லை. மேலும் இதில் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியருக்கு பணம் செலுத்தாமல் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும். மறு தேர்வுக்கான தேதி மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்” என்றார்.

Next Story

வாகன ஓட்டிகளுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவுறுத்தல்!

Published on 31/12/2023 | Edited on 31/12/2023
Trichy District Collector important instruction for motorists

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனைய திறப்பு விழா வரும் ஜனவரி மாதம் 2ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்பதற்கும், பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் 38வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்கும் பிரதமர் நரேந்திர மோடி திருச்சி வருகிறார். இதன் காரணமாக திருச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

குறிப்பாக திருச்சி விமான நிலையத்தில், மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும், வெளிப்பகுதியில் மாநகர காவல் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினரின் முதல் குழு கடந்த வெள்ளிக்கிழமை இரவு திருச்சி வந்தது. இதையடுத்து வெள்ளிக்கிழமை இரவு முதல் திருச்சி விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு அமலுக்கு வந்துள்ளது. பிரதமர் வருகையின் போது, 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், பிரதமர் மோடி திருச்சி வருகையின் போது திருச்சியில் 33,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக சொல்லப்படுகிறது.

விமான நிலையத் திறப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி நாளை மறுநாள் (02.01.2024) அன்று திருச்சிக்கு வருகை தருவதையொட்டி திருச்சியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் தெரிவிக்கையில், “நாளை இரவு (01.01.2024) இரவு 08:00 மணி முதல் விமான நிலையம் வழியாக கனரக வாகனங்கள் புதுக்கோட்டைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Trichy District Collector important instruction for motorists

அதே சமயம் விமான நிலையம் வழியாக புதுக்கோட்டை செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் ஜி-கார்னர், டி.வி.எஸ்.டோல்கேட் மேம்பாலம், மன்னார்புரம் மேம்பாலம், எடமலைப்பட்டிபுதூர் பைபாஸ் சந்திப்பு, விராலிமலை வழியாக புதுக்கோட்டை செல்ல அறிவுறுத்தப்படுகிறது. பிரதமர் வருகையையொட்டி பாஜகவினரின் வாகனங்கள் ஜனவரி 2 ஆம் தேதி காலை 9 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும். நாளை மறுநாள் (02.01.2024) காலை 07:00 மணி முதல் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் வழியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாரதிதாசன் பல்கலைக்கழகம் வழியாக செல்லும் கட்சியினரின் வாகனங்கள் கும்பக்குடி வழியாக செல்ல வேண்டும்” என தெரிவித்துள்ளார்.