ADVERTISEMENT

''பாஜகவினரிடம் எச்சரிக்கையாகவே இருங்கள்''-திமுக எம்.பி கனிமொழி!

09:44 PM Jul 31, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்டுவதில் கர்நாடகம் தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வருகிறது. அந்த வகையில் புதிதாக முதல்வராக பொறுப்பேற்றுள்ள பசவராஜ் பொம்மையும் அணைக்கட்டியே தீருவோம் என உறுதியாக கூறியுள்ள நிலையில், தமிழக பாஜக தலைவைர் அண்ணாமலை மேகதாது அணை கட்ட தமிழக பாஜக அனுமதிக்காது .இதற்காக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுப்போம் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாஜகவினரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென தூத்துக்குடி எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். ''பாஜகவினர் பல நிலைப்பாடு எடுக்கக் கூடியவர்கள். எனவே அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது மாநில உரிமை பற்றி பேசினார். ஆனால் இப்பொழுது மாநில உரிமை பறிக்கப்படுகிறது. பெகாஸஸ் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயாராக இல்லை'' என கனிமொழி தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT