Advertisment

சொத்துகுவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைவாசம்... 10.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா?

Sasikala

சொத்துக்குவிப்பு வழக்கில்நான்காண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, தண்டனை அனுபவித்த சசிகலா இன்று (27.01.2021) காலை10.30மணிக்கு விடுதலையாக உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில்இருந்த சசிகலாவுக்கு, கடந்த20 ஆம்தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டு, பின்னர் அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. தற்பொழுது கரோனாதொற்று நீங்கியிருந்தாலும் தொடர்ந்து அவருக்குவிக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நான்காண்டு கால சிறைவாசத்திலிருந்து இன்று காலை10.30மணிக்கு சசிகலாவிடுதலையாக இருக்கிறார்.அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும்சசிகலாவிடம் காலை 9 மணியளவில் அதிகாரிகள் கையெழுத்து பெற இருக்கின்றனர். சிறைத்துறை நடைமுறைகள் முடிந்ததும் 10:30 மணிக்குசசிகலாவிடுதலையாக உள்ளார்.

Advertisment

அதேபோல் சிறைவாசம் முடிந்தாலும்மருத்துவமனையில் கரோனாவுக்கு தொடர்ந்து சிகிச்சை பெறுவார் எனவும்தகவல்கள் தெரிவிக்கின்றன.

Prison Bengaluru sasikala
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe