Skip to main content

காவியான உதகை மலை ரயில்? - ஏழைகளுக்கான 'எழில்மிகு பயணம்' இனி தனியார் மயமாகிறதா? 

Published on 10/12/2020 | Edited on 10/12/2020

 

Is that 'beautiful journey' for the poor being privation

 

கடந்த சனிக்கிழமையன்று 'டி.என் 43' என்ற தனியார் நிறுவனம் தனது பெயரை விளம்பரப்படுத்தி உதகை மலை ரயிலை இயக்கியது சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.

 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை மலை ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. காலை 7.10 மணிக்குப் புறப்பட்டு உதகை செல்லும் ரயில், மீண்டும் பிற்பகல் உதகையில் இருந்து புறப்பட்டு, மேட்டுப்பாளையத்துக்கு மாலை வந்தடையும். தற்பொழுது கரோனா பெருந்தொற்று காரணமாக மலை ரயில்போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரை இ-பாஸ் நடைமுறை அமலில் உள்ளது. சாதாரண மக்கள் நீலகிரி மாவட்டம் செல்ல வேண்டுமென்றால், பர்லியார் மற்றும் குஞ்சப்பணை பகுதியில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகுதான் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

 

இந்நிலையில், தற்பொழுது சிறப்பு மலை ரயிலில் 160 பேர் பயணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் நீலகிரி மாவட்டத்தில் அனுமதி பெற்று சென்றார்களா அல்லது இவர்கள் அனைவரிடத்திலும் இ-பாஸ் இருந்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

இ-பாஸ் நடைமுறை பின்பற்றப்படவில்லை என்றால், சாதாரண மக்கள் நீலகிரி மாவட்டத்திற்குச் சுற்றுலா செல்ல முடியாத நிலையில், வசதி படைத்தவர்கள் நீலகிரி மாவட்டத்திற்குச் சென்று வர முடியும் என்ற ஒரு நிலை ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

 

Is that 'beautiful journey' for the poor being privation

 

நீலகிரி மலை ரயிலைப் பொறுத்தவரைக்கும் வாடகைக்கு விடுவது என்பது ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒரு நிலைதான். ஆனால், அது வாடகைக்கு விடப்பட்டாலும்  'நீலகிரி மலை ரயில்' என்ற பெயரை தாங்கித்தான் இயக்கப்பட்டுள்ளது. ஆனால் முதல்முறையாக இந்தப் பெரும் தொற்று காலத்தில் மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தன்னுடைய பெயரை 'டி.என் 43' என மாற்றி, முழுவதும் காவி நிறத்தில் மாற்றப்பட்டு, நீலகிரி மலை ரயில் என்ற அடையாளத்தை மறைத்து, ரயில் இயக்கப்பட்டுள்ளது. இது, சமூக ஆர்வலர்களிடையே ஒரு பெரிய கேள்விக் குறியை ஏற்படுத்தியுள்ளது.

 

பொதுவாக தற்பொழுது அனைத்தும் தனியார் மயமாகி வரக்கூடிய நிலையில், பாரம்பரியமிக்க மலை ரயிலும் தனியார்மயமாக்கும் முன்னோட்ட நிகழ்ச்சியா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மலை ரயிலைப் பொறுத்தவரை நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. இயற்கை எழில் கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சி மலையின் காடுகளுக்குள் செல்லும் அழகை ரசிக்க, சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த நிலையில், தனியார் மூலம் கவர்ச்சிகரமான வண்ணத்தில் ரயிலின் தோற்றத்தை மாற்றி ஒவ்வொரு பெட்டியிலும் விமானத்தில் இருப்பதுபோல, பணிப்பெண்கள் பணியமர்த்தப்பட்டு இருந்தார்கள். இவர்கள் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான பொருட்களை விமானத்தில் வழங்குவதுபோல, வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

 

Is that 'beautiful journey' for the poor being privation

 

இவர்களுக்கான உடையின் வண்ணம் காவி நிறத்தில் இருந்தது. அதேபோல நீலகிரி மலை ரயில் என்ற பெயர் முற்றிலும் அழிக்கப்பட்டு 'டி.என் 43' என்ற பெயர் ரயில் பெட்டிகளில் பொறிக்கப்பட்டிருந்தது. காவி மற்றும் வெள்ளை நிறத்தில் வண்ணங்கள் இருந்தது. சிறப்பு ரயிலின் கட்டணமாக மேட்டுப்பாளையத்திலிருந்து 3,000 ரூபாய் தனியார் மூலம் வசூலிக்கப்பட்டது. தனியார் இந்த ரயிலை இயக்குவதற்குக் கட்டணமாக 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளனர். 4 பெட்டிகளில் 180 பேர் வரை பயணிக்க அனுமதிப்பார்கள். பல்வேறு வசதிகளோடு கவர்ச்சிகரமாக, தனியார் மூலம் ரயிலை இயக்கினால் மக்களின் பார்வை, புதிய ரயில் மீது வரும். மேலும், வழக்கமாக இயக்கப்படும் ரயில் மீதான ஆர்வமும் குறைக்கப்படும். இதைப் பயன்படுத்தி மொத்த ரயிலையும் தனியாருக்குத் தாரை வார்க்கும் திட்டத்தின் முன்னோட்டமாக இது இருக்குமோ? என ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில், இது குறித்து பல்வேறு யூகங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

 

சேலம் ரயில்வே கோட்டம், உடனடியாக இதற்கான முழு விளக்கத்தை அளித்து மக்களின் சந்தேகங்களைத் தீர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பல்வேறு அமைப்பினர் ஒன்றிணைந்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவதற்குத் தயாராக இருக்கிறோம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் விடுமுறை; நெரிசலால் உயிரைப் பணயம் வைக்கும் பயணிகள்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
election holiday; Passengers risking their lives due to congestion

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தத் தேர்தலை முன்னிட்டு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதன் காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு தேர்தல் விடுமுறைக்காக செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள், முன்பதிவு இல்லாத ரயில் பெட்டியில் அதிகப்படியாக பயணம் செய்து வருகின்றனர். சில ரயில்களில் ஆபத்தான வகையில் தொங்கியபடி பயணம் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

ரயிலில் புகுந்த பாம்பு; இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
A snake that entered the train; Tragedy befell the young man


கேரளாவில் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த தமிழக இளைஞரைப் பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரள மாநிலம் குருவாயூரிலிருந்து மதுரை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸில் தென்காசியைச் சேர்ந்த கார்த்திக் சுப்பிரமணியம்(21) என்ற இளைஞர் பயணித்தார். ரயிலின் 7ஆம் நம்பர் கோச்சில் அவர் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது, ரயில் எட்டுமானூர் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கார்த்திக் சுப்பிரமணியம் தன்னை ஏதோ கடித்தது போல் உணர்ந்துள்ளார். உடனடியாக அந்தப் பகுதியைச் சோதனையிட்டு பார்த்ததில் அங்கு ஒரு நாகப்பாம்பு சுருண்டு கிடந்தது கண்டு அதிர்ந்துபோனார்.

தன்னை பாம்பு கடித்ததை உணர்ந்த கார்த்திக் மற்ற பயணிகளிடம் இதனைச் சொல்ல உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு, கோட்டயம் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு உடனடியாக அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அந்த ரயில் பெட்டிக்குள் எலிகள் அங்கும் இங்குமாக ஏராளமாக ஓடிக் கொண்டிருந்ததாக பயணிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக எலிகளை உணவாக சாப்பிட பாம்பு அங்கு வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், கோட்டயம் ரயில் நிலையத்திலேயே அந்தப் பெட்டி மட்டும் தனியாக கழட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ரயிலில் பயணித்த தமிழக இளைஞரைப் பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.