Skip to main content

அடித்தது போலீஸ்; பதிலுக்கு அடித்தது பப்ளிக்! -சிறைக்குள் தள்ளியது வழக்கு!

Published on 24/08/2019 | Edited on 24/08/2019

தன்னை அடித்த போலீஸை திருப்பி அடித்து கைதட்டல் வாங்குவதெல்லாம் சினிமாவில் மட்டுமே நடக்கும். நிஜத்தில் அப்படி நடந்துகொண்டால் கம்பி எண்ண வேண்டியதுதான். சாத்தூரைச் சேர்ந்த பத்மநாபனும் கண்ணனும் அப்படி ஒரு வழக்கில்தான் கைதாகியிருக்கின்றனர். சரி, விவகாரத்துக்கு வருவோம்!

அன்றைக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி  கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்காக போக்குவரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள் சாத்தூர் போலீசார். பத்மநாபனின் கடைக்கு முன்னால் அவருக்குச் சொந்தமான ஆட்டோ நின்றது. நோ பார்க்கிங் இடத்தில்  ஆட்டோ நிற்பதாகச் சொன்னது போலீஸ். ‘என்னுடைய இடத்தில்தானே ஆட்டோ நிற்கிறது. அதெல்லாம் எடுக்க முடியாது.’ என்று மறுத்துப் பேசினார் பத்மநாபன்.  

 

Beaten police; re-beaten public... incident in sathur

 

Beaten police; re-beaten public... incident in sathur

 

‘பப்ளிக்’ எதிர்த்துப் பேசினால் விரைப்பான போலீசார் சும்மாவா இருப்பார்கள்? கடைக்குள் புகுந்து பத்மநாபனைப் பின்னி எடுத்துவிட்டார்கள். அதனைத் தொடர்ந்து,  ‘வழக்கு போடுறதுன்னா போட்டுக்க வேண்டியதுதானே? மரத்தடியில்தானே ஆட்டோ நிற்குது. என்னை எதுக்கு அடிக்கணும்? ஆர்.சி.புக்கெல்லாம் தர முடியாது. கையை வெட்டிருவேன். எவனா இருந்தாலும் சரி. மொதல்ல என்னை அடிச்சதுக்குப் பதில் சொல்லுங்க.’ என்று வீராவேசமாக நியாயம் கேட்டிருக்கிறார் பத்மநாபன். அப்போது, டிரைவரான உறவினர் கண்ணனும் பத்மநாபனுக்கு உதவும் விதத்தில் அங்கு நின்றிருக்கிறார். பொது இடத்தில் போலீசுக்கும் பத்மநாபனுக்கும் காரசாரமாக நடந்த இந்த வாய்ச்சண்டையை பலரும் வேடிக்கை பார்த்தனர். சிலர் செல்போன் கேமராவில் வீடியோவும் எடுத்தனர். ஒருகட்டத்தில் தாக்குதலும் நடந்தது. 

 

Beaten police; re-beaten public... incident in sathur

 

போக்குவரத்து சார்பு ஆய்வாளர் சுந்தர்ராஜ் நம்மிடம்  “வாக்குவாதம் செய்தபோது போதையில் இருந்தார் பத்மநாபன். என் முகத்தில் குத்தினார்.  தடுமாறி கீழே விழுந்துவிட்டேன். அதற்கு முன் பத்மநாபனின் கடைக்குள் நான் போகவில்லை.  அவரை அடிக்கவுமில்லை. சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறேன்.“ என்றார்.  சார்பு ஆய்வாளர் சுந்தர்ராஜ் தாக்கப்பட்டதாக சாத்தூர் டவுண் காவல் நிலையத்தில் புகார் ஆகிவிட, பத்மநாபனும் கண்ணனும் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கின்றனர். 

யாரை வேண்டுமானாலும் காவல்துறையினர் அடிப்பார்கள். ஆனால்,  ஆத்திரத்தில் யாராவது காவல்துறையினர் மீது கைவைத்தால் விடவே மாட்டார்கள். இது,  எந்தச் சட்டத்திலும் இல்லாத பொதுவான விதியாகிவிட்டது. நியாயமா நியாயமாரே?

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.