Skip to main content

மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை சேகரிக்க பேட்டரி ஆட்டோக்கள்!

Published on 13/09/2019 | Edited on 13/09/2019

திண்டுக்கல் மாவட்டத்தில் அகரம், ஆயக்குடி, தாடிக்கொம்பு, வடமதுரை, அய்யலூர், சின்னாளபட்டி, நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, அம்மையநாயக்கனூர், நெய்காரப்பட்டி, கீரனூர், ஸ்ரீராமபுரம், கன்னிவாடி, சித்தயன்கோட்டை உட்பட 23 பேரூராட்சிகள் உள்ளன. இந்த பேரூராட்சிகளில் சுயஉதவி குழு பெண்கள் மூலம் வீடுதோறும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் சேகரிக்கப்பட்டு வளமீட்பு பூங்காவிற்கு (உரக்கிடங்கு) கொண்டு செல்லப்பட்டு அங்கு தரம் பிரித்து மக்கும் குப்பைகளை கொண்டு மண்புழு உரங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. 

பேரூராட்சி அலுவலகத்திலிருந்து தங்கள் வார்டு பகுதிக்கு மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை சேகரிக்க செல்லும் பெண்கள் சராசரியாக 5 முதல் 6 கி.மீ தூரம் வரை தினசரி குப்பை வண்டியை தள்ளிச்செல்கின்றனர். இதனால் ஒருசில நேரங்களில் சோர்வடைந்து 100 சதவீதம் முழுமையாக தெருக்களுக்கு செல்லாமல் திரும்பி விடுகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு பேட்டரி மூலம் இயங்கக்கூடிய ஆட்டோக்களை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்படவுள்ளது.

Battery autos to collect biodegradable and unpopular garbage dindigul district


சுமார் 1,80,000 மதிப்பில் வழங்கப்படும் இந்த ஆட்டோக்கள் கோவையில் உள்ள கோயங்கா மோட்டா நிறுவனம் மூலம் பெறப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. ஒரு மணிநேரம் இந்த ஆட்டோவை மின்சாரம் மூலம் ஜார்ஜ் செய்தால் 10கி.மீ தூரம் ஓடக்கூடியது. காலை மாலை இரு நேரங்களில் சுமார் 3மணிநேரம் ஜார்ஜ் செய்தால் போதும் ஒருநாள் முழுவதும் இந்த பேட்டரி மூலம் இயங்கக்கூடிய ஆட்டோக்களை சிரமமின்றி இயக்கலாம். 

தற்போது சின்னாளபட்டி பேரூராட்சி வளாகத்தில் ஆட்டோக்களுக்கு பக்கவாட்டு தடுப்புகள் பொறுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் இரா.குருராஜன் கூறுகையில் பேரூராட்சிகளில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை அதிக அளவில் பெறவும், சிரமமின்றி எளிதாக குறுகிய தெருக்களுக்கும் சென்று வீடுதோறும் தவறாமல் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பெறுவதற்காக பேரூராட்சிகளுக்கு பேட்டரி மூலம் இயங்கக்கூடிய ஆட்டோக்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் எரிபொருள் சிக்கனமாவதோடு சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது என்றார். இனி பேரூராட்சிகளில் உள்ள தெருக்களில் பச்சை நிற ஆட்டோக்கள் குப்பையை சேகரிக்க வளம் வரும்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.