ADVERTISEMENT
ADVERTISEMENT
தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு காரணமாக அவ்வப்போது அருவியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதிப்பது வழக்கம்.
இந்நிலையில் தற்போது மீண்டும் குற்றாலத்தில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் மறு அறிவிப்பு வரும் வரை குற்றாலத்தின் அனைத்து அருவிகளில் குளிக்க தடை விதிப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Show comments