ADVERTISEMENT
அதே சமயம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாகத் தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருவிகளில் பாதுகாப்புப் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
ADVERTISEMENT
மேலும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து குற்றால அருவிகளிலும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வார விடுமுறை நாளையொட்டி ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், ஐயப்பன் கோவில் சீசன் என்பதால் ஐயப்ப பக்தர்களும் குற்றாலம் அருவிகளில் குளிக்க வந்திருந்தனர். ஆனால், அரசின் இந்தத் தடை உத்தரவை அறிந்து சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் ஏமாற்றமடைந்தனர்.
Show comments