Skip to main content

“இந்திய வரலாற்றை மறு நிர்மாணம் செய்வதற்கு அடிகோல்..” - தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் துறை ஆய்வாளர் மணிகண்டன் 

Published on 10/05/2022 | Edited on 10/05/2022

 

“The Basis for Reconstructing Indian History ..” - Tamil University Science Department Analyst Manikandan

 

தமிழ்மொழி வளர்ச்சி பண்பாட்டு அடையாளங்களை தொடர்ச்சியாக பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளையும் முன்னெடுப்புகளையும் தமிழ்நாடு தொல்லியல்துறை செய்து வருவதும் உலகக் கவனம் பெறுவதாக அமைந்திருக்கிறது. இதுகுறித்து தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் துறை ஆய்வாளர் ஆ.மணிகண்டன் பாராட்டு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது; “முன்னப்போதும் இல்லாத அளவிற்கு கீழடி, சிவகளை, பொற்பனைக்கோட்டை, கங்கைகொண்ட சோழபுரம், ஆதிச்சநல்லூர், மயிலாடும்பாறை, கங்கைகொண்ட சோழபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அகழாய்வு பணிகள் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மற்றும் பல்கலைக்கழகங்கள் மூலம் நடந்து வருகிறது.

 

இந்தியாவில் தமிழகத்தில்  இரும்பு காலத்தின் உச்சபட்ச கணக்கீடு மயிலாடும்பாறையில் கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும், உலக அளவில் அதிக தொழில்நுட்ப வசதிகளுடன் இயங்கும் அமெரிக்காவின் பீட்டா நிறுவனம் மூலமாக அறிவியல்பூர்வ காலக்கணிப்பை வெளிப்படுத்தி 4200 ஆண்டுகள் பழமையானது இரும்புக்காலம் என்பதை கரிம பரிசோதனையின் மூலம் தமிழ்நாடு தொல்லியல்துறை நிறுவியிருப்பது, இந்திய வரலாற்றை மறு நிர்மாணம் செய்வதற்கு அடிகோலும், தமிழகத்தில் கிடைத்திருக்கும் பல்வேறு பானை குறியீடுகளையும் சிந்து சமவெளி எழுத்துக்களையும் ஒப்புநோக்கி அதற்கான ஆய்வினை தமிழ்நாடு அரசு செய்யவிருப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் விதி எண் 110ன் கீழ் அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது. இது சிந்துச் சமவெளி நாகரிகத்திற்கும், தமிழர் நாகரிகத்திற்கும் இருந்த மொழி அறிவுசார் தொடர்பை வெளிப்படுத்துவதாக அமையும், உலகம் முழுவதும் பரவியிருந்த தமிழர்களின் வணிகத் தொடர்பை வெளிப்படுத்தும் நோக்கத்தோடு, பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் அகழ்வாய்வு செய்யவிருப்பதாக தமிழ்நாடு தொல்லியல் துறை அறிவித்திருப்பதன் மூலமாக தமிழர்களின் வணிகத் தொடர்பு புதிய தரவுகளைக்கொண்டு அறிவியல்பூர்வமாக நிறுவுவதற்கான வாய்ப்பு அமைந்துள்ளது.

 

இந்திய அளவில் தமிழ்நாடு தொல்லியல் துறை மிக முக்கிய இடத்தைப் பிடித்து இருப்பதற்கு காரணமாக இருக்கும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கும் தமிழ்நாடு தொல்லியல் துறையின் அனைத்து நிலை ஆய்வாளர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக அரசு  தமிழர் பண்பாட்டை காப்பதிலும் தமிழ்மொழி வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் சிறப்பான முன்னெடுப்பை செய்வதற்கு இத்தகைய ஆய்வுகள் அடித்தளம் அமைக்கும்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

கோடை இளவரசியைக் காணச் சென்ற முதல்வர்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
The Chief Minister is coming to see the summer princess with sentiment

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோடை இளவரசியான கொடைக்கானல் பகுதியைக் காண தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள்.

இந்த ஆண்டு, வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அரசியல்வாதிகளும், அரசியல் கட்சித் தலைவர்களும் கோடை இளவரசியான கொடைக்கானலை காண வந்து செல்கிறார்கள். இந்த நிலையில், கோடை வெயிலை தணிக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மாலத்தீவு செல்வதாக இருந்தது. ஆனால், திடீரென அதை ரத்து செய்துவிட்டு கோடை இளவரசி கொடைக்கானலை காண முடிவு செய்தார். அதன் அடிப்படையில், இன்று காலை 29ம்தேதி சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு புறப்பட்ட முதல்வர் அங்கிருந்து கார் மூலமாக கொடைக்கானலில் உள்ள பாம்பார்புரத்தில் இருக்கும் தயாரா ஸ்டார் ஹோட்டலில் மே 4ஆம் தேதி வரை தங்க இருக்கிறார். 

முதல்வர் கொடைக்கானல் வருகையை ஒட்டி கொடைக்கானல் மூஞ்சி கல்லிலிருந்து பாம்பார்புரம் வரும் வரை சாலைகள் பேண்டேஜ் ஒர்க் பார்க்கப்பட இருக்கிறது. அதை தொடர்ந்து, இன்று காலை எட்டு மணி முதல் மதியம் ஒரு மணி வரை வத்தலக்குண்டு காட் ரோடு வழியாக கொடைக்கானல் செல்லும் சாலை போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அதோடு கொடைக்கானல் மலைப்பகுதியில் ட்ரோன்கள், பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் உத்தரவிட்டுள்ளார். அதுபோல், முதல்வர் பாதுகாப்புக்காக எஸ்.பி தலைமையில் இரண்டு ஏ.டி.எஸ்.பி, 2 டி.எஸ்.பி, ரெண்டு இன்ஸ்பெக்டர், பத்து சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

The Chief Minister is coming to see the summer princess with sentiment

கடந்த 2019ல் பாராளுமன்றத் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே முதன் முதலில் கொடைக்கானலுக்கு முதல்வர் ஸ்டாலின் வந்தவர், அங்குள்ள கால்டன் ஹோட்டலில் ஒரு வாரம் தங்கி இருந்து விட்டு சென்றார். அதன் பின், பாராளுமன்றத் தேர்தல் முடிவில் 40க்கு 39 தொகுதிகளை தி.மு.க கைப்பற்றியது. அதேபோல் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே கொடைக்கானல் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பம்பார்புரம் தமாரா ஸ்டார் ஓட்டலில் தங்கி விட்டு சென்ற பின்பு தான் நூற்றுக்கு மேற்பட்ட சீட்டுகள் வாங்கியதன் பெயரில் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக தற்பொழுது பாராளுமன்ற தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு மாதம் இருக்கும் சூழ்நிலையில் கொடைக்கானலுக்கு முதல்வர் ஸ்டாலின் வந்துள்ளார். 

பாம்பாராபுரத்தில் தங்கிய தமாரா ஹோட்டலில் ஒரு வாரம் குடும்பத்தாருடன் தங்கி ஓய்வெடுக்க இருப்பதால் அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சி பொறுப்பாளர்கள், அமைச்சர்கள் யாரையும் முதல்வர் சந்திக்க விரும்பவில்லை. ஆனால், அரசியல் ரீதியாக மந்திரி சபை மாற்றம் மற்றும் துணை முதல்வராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கொண்டு வருவதற்கான ஆலோசனையும் குடும்பத்தாருடன் பேசி முதல்வர் முடிவெடுக்க இருக்கிறார் என்ற பேச்சும் இருந்து வருகிறது. இப்படி சென்டிமென்ட் மூலம் முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து ஒவ்வொரு தேர்தலையும் கொடைக்கானல் வந்து கோடை இளவரசியை ரசித்து விட்டு செல்வது போலத்தான் தற்பொழுதும் கோடை இளவரசியைக் காண கொடைக்கானல் வந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, முதல்வர் வருகையையொட்டி, அங்கு போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.