ADVERTISEMENT

அம்பேத்கர் பிறந்தநாளுக்கு பேனர் வைக்க முயன்றவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

08:36 AM Apr 14, 2022 | kalaimohan

ADVERTISEMENT


திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே அம்பேத்கர் பிறந்தநாளுக்காக பேனர் வைக்க முயன்ற இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு பேனர் வைக்க முற்பட்டுள்ளார் சின்னதுரை என்ற இளைஞர். தில்லைவிளாகம் என்ற கிராமத்தில் பேனர் வைக்க முற்பட்ட நேரத்தில் மேலே இருந்த மின்சார கம்பி மோதி இளைஞர் சின்னதுரை பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT