Skip to main content

நடைபாதைகளின் குறுக்கே பேனர்கள் வைக்க தடை!

Published on 07/04/2018 | Edited on 07/04/2018
penar

 

சென்னை மாநகரில் அனுமதியின்றி விதிமீறி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என, டிராபிக் ராமசாமி அனுப்பிய மனுவின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு, தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

 

இந்த வழக்கு விசாரணையில் விதிமீறி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், பொதுமக்கள் நடமாட்டத்திற்கும், வாகன போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாமல் மட்டுமே பேனர்கள் வைக்க வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் நடைபாதைகளின் குறுக்கே பேனர்கள் வைக்க கூடாது என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பேனரில் அரவிந்த்சாமி; பதறியடித்த நிர்வாகிகள் 

Published on 18/01/2024 | Edited on 18/01/2024
Aravindsamy in AIADMK banner; Panicked executives

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாள் நேற்று அதிமுகவினரால் கொண்டாடப்பட்டது. இதில் சில இடங்களில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த ஆதரவாளர்களும், எடப்பாடி அணியை சேர்ந்த ஆதரவாளர்களும் மோதிக்கொள்ளும் நிகழ்வுகளும் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் மாதனூர் பகுதியில் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக தொண்டர்கள் பல்வேறு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். எம்.ஜி.ஆர் உடைய உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் சிறிய அளவிலான பந்தல் அமைக்கப்பட்டு அதனை ஒட்டி வரவேற்பு பேனர்களும் வைக்கப்பட்டிருந்தது.

அந்த வரவேற்பு பேனர் ஒன்றில் எம்ஜிஆர் புகைப்படத்திற்குப் பதிலாக 'தலைவி' என்ற படத்தில் எம்ஜிஆர் வேடத்தில் அரவிந்த்சாமி நடித்த புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இது சமூக வலைதளங்களில் வெளியாகி கிண்டலுக்கு ஆளானது. உடனடியாக பதறியடித்த அந்த பகுதி அதிமுக நிர்வாகிகள் அரவிந்த்சாமி புகைப்படம் இருந்த இடத்தில் எம்ஜிஆரின் மற்றொரு அசல் படத்தை ஒட்டி விட்டு சென்றனர்.

Next Story

பேனர்கள் மாயம்; சாலைமறியலில் ஈடுபட்ட விசிகவினர்

Published on 18/08/2023 | Edited on 18/08/2023

 

Banners are removed; The vck involved in the roadblock

 

புதுக்கோட்டையில் விசிக தலைவர் திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு அக்கட்சியினர் வைத்த பேனர்கள் காணாமல் போனதாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு பரபரப்பை ஏற்படுத்தியது.

 

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த மாட்டாங்கால் பகுதியில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு அக்கட்சியினர் பேனர் வைத்திருந்தனர். இந்நிலையில், திடீரென நேற்று வைக்கப்பட்டிருந்த பேனர்கள் காணாமல் போனதாக இருதரப்பு இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனால் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பொழுது ஒவ்வொரு ஆண்டும் இதே போல் ஒரு சமூகத்தினர் பிளக்ஸ் பேனர்களை வைத்தால், மற்றொரு தரப்பினர் அவற்றை அகற்றுவதையே வேலையாக செய்து வருகின்றனர் எனக் குற்றச்சாட்டு தெரிவித்தனர். காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.