Skip to main content

தடை செய்யப்பட்ட பயோடீசல் மீண்டும் புழக்கத்தில்..?

Published on 16/04/2021 | Edited on 16/04/2021

 

l banned Biodiese came for acirculation

 

இந்திய முழுவதும் பயோடீசல் விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்து, அதைப் பயன்படுத்தக் கூடாது என்ற கட்டுப்பாடும் விதித்துள்ளது. தற்போது தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் பயோ டீசல் விற்பனை துவங்கியுள்ளது. பயோ டீசல் என்பது குருடாயில் என்று சொல்லப்படும் கழிவில் மண்ணெணய் கலந்து பயன்படுத்துவது. கச்சா எண்ணெயின் இறுதி கழிவான அதில் இருந்து தயாரிக்கப்படும் இந்த ஆயில், லாரி உள்ளிட்ட கனரக டீசல் இன்ஜின் வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும்.

 

ஆனால், இந்த ஆயில் பயன்படுத்தும் வாகனங்களில் உள்ள பம்புகள் பழுதடைவதால், இதனை தமிழக அரசு தடை செய்தது. தற்போது கரூர் பகுதிகளில் உள்ள குவாரிகளில் இந்தப் பயோடீசல் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல கோவை, திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் சரக்கு லாரிகள் வைத்திருக்கும் முதலாளிகளும் சிறிய அளவில் லாரிகள் வைத்திருக்கும் முதலாளிகளும் இந்தப் பயோ டீசலை பயன்படுத்துகின்றனர். இதனால் அரசு நடத்தக்கூடிய இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்டவை மூலம் விற்பனை செய்யப்படும் சுத்தமான டீசல் விற்பனையாகாமல், அரசுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பை தருகிறது. 

 

இந்தப் பயோ டீசல் முழுமையாக மத்திய அரசால் தடை செய்யப்பட்டிருந்தும் ஆந்திரா, கோவா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து லாரிகள் மூலம் நள்ளிரவில் தமிழகத்திற்குள் கொண்டுவரப்பட்டு, சில குறிப்பிட்ட டீலர்கள் அதனை 50க்கும் அதிகமான பேரல்களில் நிரப்பி வைத்து, அவர்களுடைய குவாரிகளுக்குப் பயன்படுத்துவதோடு விற்பனையும் செய்கின்றனர். தற்போது ஒரு லிட்டர் டீசலின் விலை 86 ரூபாய் என அரசு நிர்ணயித்திருக்கும் நிலையில், இந்தப் பயோ டீசலின் விலை 74 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. சுமார் 12 ரூபாய் விலை குறைவாக விற்கப்படும் இந்தப் பயோடீசலை மட்டுமே லாரி உரிமையாளர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். 

 

லாரி உரிமையாளர்கள் மட்டுமின்றி, 35 லிட்டர் - 50 லிட்டர் கேன்கள் மூலம் அவற்றை சில்லறையாகவும் விற்பனை செய்து வருகின்றனர். டீசல் என்ஜின் பயன்படுத்தக்கூடிய நான்கு சக்கர இலகுரக வாகனங்கள், கார் உள்ளிட்டவை இந்தப் பயோ டீசலைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தப் பயோ டீசல் பயன்பாட்டைத் தடுக்கவும், அவற்றின் கொள்முதலை தடை செய்யவும் தமிழகம் முழுவதும் உணவு கலப்பட தடுப்பு பிரிவு டிஎஸ்பிக்கள் 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

 

அதில் 3 டிஎஸ்பிக்கள், ஆந்திரா மற்றும் கோவாவில் இருந்து கொண்டு வரப்படும் பயோ டீசலை தமிழகத்திற்குள் வருவதற்கு அனுமதிக்கின்றனர். தமிழகத்தில் உள்ள லாரி உரிமையாளர்கள் மற்றும் பயோ டீசல் வாங்கி மொத்தமாக விநியோகிக்கும் ஏஜென்டுகள் ஆகியோரிடமிருந்து மாதம் தவறாமல் பணத்தைப் பெற்றுக்கொண்டு, அதனைப் பயன்படுத்துவதற்கும் விற்பதற்கும் அனுமதி அளித்துள்ளனர். அதிலும், 200 முதல் 500 வரையிலான சரக்கு லாரிகள் வைத்திருக்கக்கூடிய முதலாளிகளோடு நேரடி தொடர்பில் இருக்கக்கூடிய டிஎஸ்பிக்கள், சட்டரீதியாக எப்படிப்பட்ட பிரச்சினை வந்தாலும் அதை சமாளிப்பதற்கு தயாராகவும் உள்ளனர். எனவே மத்திய அரசும், தமிழக அரசும் இப்பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணுமா?

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அரச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.