Skip to main content

பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ரூ.6 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை!

Published on 28/05/2018 | Edited on 28/05/2018
boi


திருவள்ளூரில் உள்ள பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் உள்ள ரூ.6 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்கள் வார இறுதி விடுமுறைக்குப் பின் இன்று வழக்கம் போல் வங்கியை திறக்க வங்கி மேலாளர் மோகன் வங்கிக்கு வந்துள்ளார். அப்போது கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் சம்பவம் குறித்து உடனடியாக அவர் காவல்துறைக்கு தகவல் அளித்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலர்கள் வங்கியின் உள்ளை சென்று பார்த்தபோது, பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த ரூ.6 கோடி மதிப்பிலான நகைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளளது. இதையடுத்து சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்துள்ள காவல்துறையினர் வங்கியில் உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையிலும், வங்கி ஊழியர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

வங்கியில் கொள்ளை போன அனைத்து நகைகளும் மீட்பு - காவல்துறை தகவல்

Published on 19/08/2022 | Edited on 19/08/2022

 

பரக

 

சென்னை அரும்பாக்கத்தில் உள்ளது 'ஃபெடரல் வங்கி'  கிளை. இங்குள்ள தங்க நகைக்கடன் பெறும் பிரிவில் லாக்கரில் இருந்த பணம் மற்றும் நகைகளை சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் கொள்ளையடித்த நிலையில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். வங்கியில் காவலிலிருந்த காவலாளிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்த வங்கி ஊழியர் முருகன் மற்றும் இருவர் வங்கியின் மேலாளர் உள்ளிட்டவர்களை கட்டிப்போட்டுவிட்டு துப்பாக்கி முனையில் 11 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட இந்த சம்பவத்தில் பாலாஜி, சக்திவேல், சந்தோஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

 

இந்த நிலையில் நேற்று முன்தினம் முக்கிய குற்றவாளியான முருகனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோ நகையில் ஏற்களவே 18 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தக் கொள்ளை தொடர்பாக விசாரித்து வரும் காவல்துறையினர் வங்கியில் கொள்ளை போன 32 கிலோ நகைகளும் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். 

 

 

Next Story

சென்னை வங்கியில் நகைகள் கொள்ளை!

Published on 13/08/2022 | Edited on 13/08/2022

 

Jewelery robbery in Chennai bank!

 

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஃபெடரல் வங்கியின் தங்க நகைக்கடன் பிரிவில் துப்பாக்கி முனையில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. 

 

ஃபெடரல் வங்கியில் தங்க நகைக்கடன் பிரிவில் லாக்கரில் இருந்த பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. வங்கி மேலாளர் அளித்த தகவலின் பேரில் வடக்கு மண்டல காவல்துறைக் கூடுதல் ஆணையர் அன்பு தலைமையிலான காவலர்கள், வங்கிக்கு வந்து விசாரணை நடத்தினர். 

 

லாக்கரில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. முருகன் என்ற வங்கி ஊழியர், தனக்கு குளிர்பானங்கள் தந்ததாகவும், அதைக் குடித்த பின் மயங்கிய நிலையில் கொள்ளை நடந்துள்ளதாகவும் காவலாளி தெரிவித்துள்ளார். 

 

நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது தொடர்பாக, நான்கு தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.