இன்று காலை முதல் 24 மணி நேர வங்கி வேலைநிறுத்தத்தில் ஊழியர்கள் அமர்ந்திருந்ததால், இந்தியா முழுவதும் வங்கி நடவடிக்கைகள் இன்று பாதிக்கப்பட்டுள்ளன. மற்றவங்கி ஊழியர்களும்அவர்களுக்கு முழு ஆதரவையும் அளித்தனர். பத்து பொதுத்துறை வங்கிகளை நான்கு பெரிய வங்கிகளில் இணைக்க மத்தியஅரசு எடுத்த முடிவுக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்துவருகிறது.
அதன்படி இன்று சென்னையிலும் வங்கி ஊழியர்கள்ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கிகள் இன்று வெறிச்சோடி காணப்பட்டன.