கேரளாவில் ஊடுருவியுள்ள பங்களாதேஷ் கொள்ளையா்களால் அந்த மாநில மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
கேரளாவில் மழை வெள்ளம் பாதிப்பின் போது முகாம்களின் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களின் வீடுகளில் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அரங்கேறின. இந்த சம்வத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலன கொள்ளையா்கள் கேரளாவில் தங்கி வேலை செய்து வரும் பங்களாதேஷை சார்ந்தவா்கள் என்று கண்டறியப்பட்டது.
மேலும் கேரளாவில் தற்போது பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் வீடுகளில் கொள்ளையடிப்பதற்காக இரண்டு வாரங்களுக்கு முன்பு 50க்கும் மேற்பட்ட கொள்ளையா்கள் பங்களாதேஷில் இருந்து கேரளாவுக்கு ஊடுருவி இருப்பதாக போலீசாரிடமிருந்து தகவல் வெளியானது. அந்த கொள்ளையா்கள் தான் மாத்ருபூமி பத்திரிக்கையின் கண்ணூர் பதிப்பின் செய்தி ஆசிரியரின் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்து விட்டு கணவன் மனைவியை தாக்கியுள்ளனர்.
கண்ணூர் சிட்டி உருவாச்சால் பகுதியில் உள்ள வீட்டில் மாத்ருபூமியின் ஆசிரியர் வினோத் சந்திரா மற்றும் அவருடைய மனைவி சரிதா குமாரி இருவரும் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு 1.30 மணிக்கு கதவு தட்டும் சத்தம் கேட்டு வினோத் சந்திரா கதவை திறந்ததும், முகமூடி அணிந்த கொள்ளையா்கள் 4 பேர் வீட்டுக்குள் புகுந்து கணவன் மனைவி இருவரின் வாயையும் துணியால் கட்டி போட்டு பலவந்தமாக தாக்கியுள்ளனர்.
பின்னர் பீரோவில் இருந்த 25 பவுன் நகை மற்றும் 15 ஆயிரம் பணம், விலையுயா்ந்த இரண்டு செல்பேன் இருவருடைய ஏடிஎம் கார்டையும் எடுத்துக் கொண்டு இரண்டு மணி நேரத்துக்கு பிறகு அங்கிருந்து வெளியே சென்றதும் வந்து நின்ற கார் ஒன்றில் ஏறி கொள்ளையர்கள் தலைமறைவானர்கள்.
பின்னர் காலை 6 மணிக்கு பக்கத்தில் உள்ளவா்கள் வந்து வினோத் சந்திராவையும் மனைவியையும் கட்டை அவிழ்த்துவிட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சோ்த்தனர். இச்சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மாநிலம் முமுவதும் உள்ள காவல்நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வேலை செய்து வரும் பங்களாதேஷத்தை சோ்ந்தவர்களை பிடித்து விசாரணை நடத்த டிஜிபி உத்தரவிட்டுள்ளார். மேலும் அனைத்து தனிப்படை போலிசும் களமிறக்கப்பட்டுள்ளது.
மேலும் ஓரே நாளில் பங்களாதேஷத்தை சார்ந்த பலர் தலைமறைவாகி விட்டனர் என்றும் கூறப்படுகிறது.
பங்களாதேஷ் கொள்ளையர்கள் அட்டகாசம்! அச்சத்தில் கேரள மக்கள்!
சார்ந்த செய்திகள்
Next Story
மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு
இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாளப் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. பரவா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்திருந்தார். இப்படம் கொடைக்கானலில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது. 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் கேரள இளைஞர்கள், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி அதிலிருந்து எப்படி மீள்கின்றனர் என்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.
சர்வைவல் த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் ரசிகர்கள் பாராட்டி வந்தனர். இப்படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலித்து மலையாள திரையுலகில் ரூ.200 கோடி கிளப்பில் இணைந்த முதல் படம் என்ற சாதனையை படைத்தது. இந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான பரவா பிலிம்ஸ் பங்குதாரர் ஷான் ஆண்டனி, லாபத்தில் பங்கு தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக கேரளா அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவர் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “ மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்காக ரூ.7 கோடியை முதலீடு செய்தேன். பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர் ஷான் ஆண்டனி லாபத்தில் 40 சதவீதம் பங்கு தருவதாக கூறியிருந்தார். ஆனால் இதுவரை எனக்கு ஒரு ரூபாய் கூட பணம் தரவில்லை. லாபம் மட்டும் இல்லாமல் முதலீடு செய்த பணத்தை கூட திருப்பி தரவில்லை” என குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளர்களான சவுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகியோரின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக விளக்கம் கேட்டு தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் வுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகிய மூன்று பேர் மீதும் மரடு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எர்ணாகுளம் நீதிமன்ற உத்தரவின்படி வழக்கானது பதிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story
பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.
போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.
புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.