Skip to main content

எடப்பாடியை வரவேற்க உருவாக்கப்பட்ட வாழை, கரும்பு, நெல் வயல்; பார்வையிட்ட வனத்துறை அமைச்சர்!!

Published on 14/03/2020 | Edited on 14/03/2020

தமிழகத்தில் திண்டுக்கல் உள்பட 9 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழக முதல்வர் எடப்பாடியும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரி மருத்துவ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிவருகிறார். அதுபோல் திண்டுக்கல்லில் ஒடுக்கம் பகுதியில் புதிதாக அமைய உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இன்று முதல்வர் எடப்பாடி அடிக்கல் நாட்டுகிறார். அதைத்தொடர்ந்து நலத்திட்ட உதவிகளும் வழங்க இருக்கிறார். இப்படி புதிதாக உருவாகப்போகும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திண்டுக்கல்லில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பகுதியில் அமைய இருக்கிறது. அதற்கான அடிக்கல் நாட்டு விழாவும்  அங்கே  நடைபெற இருப்பதால் கடந்த ஒரு மாதமாக  அப்பகுதியில்  மிகப்பிரம்மாண்டமாக  மேடை அமைக்கப்பட்டும் பயனாளிகள் கட்சி காரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்காரும் அளவிற்கு பல ஏக்கர் நிலங்களை சுத்தப்படுத்தி மேடை அமைக்கபட்டுள்ளது.

 

 Banana, sugar cane, paddy field, created to welcome Edappadi


இந்த விழா மேடைக்கு முன் புறத்தில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா மற்றும் தற்போதைய முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோரின் மெகா சைஸ் கட்டவுட்டுகளும் வைக்கப்பட்டுள்ளது. அதுபோல் காவேரி காப்பாளரே  என்ற பெயரில் காவேரி அணை போல் செட்டிங்ஸ் வைத்தும் அதில் தண்ணீர் நிரம்பி வடிவது போலவும் வைத்துள்ளனர். அதற்கு கீழ் விவசாய நிலங்களான கரும்பு,வாழை, நெல் பயிர்கள் நடப்பட்டு ஒரு விவசாயம் தோட்டம் போலவே வடிவமைத்து இருக்கின்றனர். அதைக்கண்டு அப்பகுதிகளில் உள்ள பொதுமக்களும்  சாரை சாரையாக வந்து  விவசாய நிலங்கள் போல் இருப்பதைக் கண்டு சந்தோஷத்தில் மூழ்கி  விட்டனர். அதோடு  அங்கு நின்று புகைப்படம் எடுப்பதும் செல்ஃபி எடுப்பதுமாக இருந்து வந்தனர்.

 Banana, sugar cane, paddy field, created to welcome Edappadi


இந்த நிலையில்தான் சட்டமன்ற கூட்டத் தொடர் முடிந்தவுடன் உடனே சென்னையிலிருந்து மதுரை வந்து மதுரையில் இருந்து விழா நடைபெறும் இடத்திற்கு வந்த  வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனோ, விழா நடைபெறும் முகப்பில் ஒரு தோட்டம் போல் வாழை, நெல், கரும்பு போன்ற விவசாயம் நிலங்கள் போலவே தத்துரூபமாக இருப்பதைக்கண்டு பூரித்துப் போய்விட்டார். அதோடு நெல் பயிர்களுக்கு இடையே உள்ள வரப்புகளில் நடந்து சென்று நெல் பயிர்களை பார்வையிடும் வாழை, கரும்புகளை பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து விழா நடக்கும் மேடைக்கு சென்று அங்கு நடைபெறும் பணிகளையும் துரிதப்படுத்த சொல்லி வலியுறுத்தினார். அதேபோல் விழாவுக்கு வரும் பயனாளிகள் எந்த இடத்தில் உட்காருகிறார்கள், அதுபோல் பொதுமக்கள் உட்காருகிறார்கள் போன்ற இடங்களையும் பார்வையிட்டார்.

 

 Banana, sugar cane, paddy field, created to welcome Edappadi


அதன் பின் விழா மேடைக்கு வெளியே எந்தெந்த இடத்தில் கார் பார்க்கிங் இருக்கிறது என்பதையும் பார்வையிட்டார். முதன்முதலாக முதல்வர் எடப்பாடி திண்டுக்கல் அரசு விழாவில் கலந்து கொள்வதால் அதில் ஏதும் குறைகள் இருந்து விடக்கூடாது என்பதற்காக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இரவு பகல் பாராமல் தீவிரம் காட்டி வருகிறார். இதில்  மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி,  மாவட்ட செயலாளர் மருதராஜ். கூட்டுறவு வங்கி தலைவர் ராஜ்மோகன்,அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதி முருகன், திண்டுக்கல் அர்பன் பேங்க் தலைவர் பிரேம் உள்பட அதிகாரிகளும்  கட்சி பொறுப்பாளர்கள் பலரும் உடனிருந்தனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

'இனியாவது ரிப்பன் வெட்டுங்கள் ஏனென்றால் ஆட்சி சீக்கிரம் போகப் போகிறது'-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று  வருகிறது. இந்நிலையில் சேலத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''பிரம்மாண்டமான கட்டிடத்தை கட்டி கொடுத்திருக்கிறோம். கட்டி 3 வருடம் ஆகிறது. 1200 கோடியில் கட்டிக் கொடுத்திருக்கிறோம். ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா என பல கட்டிடங்களை கட்டி வைத்திருக்கிறோம். ஆனால் ஒற்றைச் செங்கலை தூக்கிக்கொண்டு ஊர் ஊராக போகிறீர்களே உதயநிதி ஸ்டாலின் பல லட்சம் செங்கலில் கட்டி இருக்கிறோம் ஏன் அதை திறக்க மாட்டேன் என்கிறீர்கள்.

அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடம் என்று இன்றுவரை ரிப்பன் வெட்டுவதற்கு உங்களால் முடியவில்லை. மூன்று வருடம் ஆகிறது. இனியாவது ரிப்பன் வெட்டுங்கள் ஏனென்றால் ஆட்சி சீக்கிரம் போகப் போகிறது. என்ன கொடுமை பாருங்கள் நிறைவேற திட்டத்தை செங்கல்லை தூக்கிக்கொண்டு விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் கட்டிமுடித்த திட்டத்தை திறக்க முடியாத ஒரே அரசு திமுக அரசு. இந்த திட்டம் கொண்டுவரக் கூடாது என்று பார்க்கிறார்கள்.

இது ஆசியாவிலேயே மிகப்பெரிய திட்டம். கால்நடை பூங்கா திட்டம் முழுக்க முழுக்க விவசாயிகளுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம். அமெரிக்கா செல்லும் பொழுது அங்கு ஒரு பால் பண்ணைக்கு சென்றேன். அங்கு ஒரு பசு ஒரு நாளைக்கு 65 லிட்டர் பால் கறக்கிறது. அந்த பசு போல நம்முடைய மாநில சீதோசன நிலைக்குத் தக்கவாறு கலப்பின பசுக்களை உருவாக்கி விவசாயிகள் கொடுக்க வேண்டும். 40 லிட்டர் பாலை ஒரு நாளைக்கு கறந்து அவர்கள் வருமான பெருக வேண்டும் என்பதற்காக இந்த அற்புதமான திட்டத்தை கொண்டு வந்தேன். அதில் கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் உள்ளது . அதன் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டு கிடைக்கும் கால்நடைகளை விவசாயிகளுக்கு கொடுத்து இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் குறிக்கோள். இன்று நாம் ஒரு ஆடு வளர்த்தால் 20 கிலோ தான் கிடைக்கும். ஆனால் கலப்பின ஆடு வளர்த்தால் 40 கிலோ கிடைக்கும். இந்த திட்டத்தை முடக்கி வைத்த அரசாங்கம் திமுக அரசாங்கம். கால்நடை பூங்கா வந்திருந்தால் இந்தப் பகுதி பெரிய வளர்ச்சி அடைந்திருக்கும். உலக அளவில் நம்முடைய சேலம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி பிரசித்தி பெற்றிருக்கும்'' என்றார்.