Skip to main content

ஆன்லைன் வியாபாரத்தை தடை செய்... வியாபாரிகள் சங்கம் போராட்டம்!

Published on 21/11/2019 | Edited on 21/11/2019

கார் முதல் குண்டூசி வரை, கடுகு முதல் காய்கறிகள் வரை இப்போது பிளிப்கார்ட், அமேசான் போன்ற வெப்சைட்களில் புக் செய்தால், வீடு தேடி வந்து டெலிவரி செய்கின்றனர். இதனால் லட்சக்கணக்கான சிறு, குறு வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். இதனை தடுக்க வேண்டும் அல்லது ஆன்லைனில் வியாபாரம் செய்யும் நிறுவனங்களுக்கு கூடுதல் வரி விதிக்க வேண்டும் என்கிற வேண்டுக்கோள் பொருளாதார வல்லுநர்களிடமிருந்தே வருகின்றன.

Ban Online Business ... Traders Association Struggle


ஆன்லைன் வர்த்தகத்துக்கு வரி விதிக்க சொல்லக்காரணம், ஒரு வியாபாரி என்பவர் கடையை வாடகைக்கு பிடிக்க வேண்டும், அதற்கு அட்வான்ஸ் தரவேண்டும், மாதம் தோறும் வாடகை, மின்கட்டணம், தொழில்வரி கட்ட வேண்டும். ஆன்லைன் வியாபாரம் என்பது, வெப்சைட் உருவாக்கி, அதை பராமரித்தால் போதும். கடை வைக்க 100 ரூபாய் செலவாகிறது என்றால், ஆன்லைன் மார்க்கெட் உருவாக்க 30 ரூபாய் இருந்தால் போதுமானது. அதனாலயே இந்த ஆன்லைன் வியாபாரத்தை தடை செய்யச்சொல்கிறார்கள் வியாபாரிகள். இதற்காக பல்வேறு கட்ட போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
 


இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகரத்தில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் சங்கத்தினர், நுகர்பொருள் விநியோக சங்கத்தின் மாநில துணைத்தலைவர் செந்தில்முருகன் தலைமையில், ஆன்லைன் வர்த்தகத்தை கண்டித்தும், அதனை அனுமதித்த மத்தியில் ஆளும் பாஜக அரசையும், பிரதமர் மோடியையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டம் நவம்பர் 20ந்தேதி, திருப்பத்தூர் தாசில்தார் அலுவலகம் எதிரே செய்தனர். இதில் இருபதுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்துக்கொண்டனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.