நீலகிரி, நாமக்கல், கன்னியாகுமரி உட்பட 9 மாவட்டங்களில் அனைத்துப் பதவிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றுள்ளது.
தூத்துக்குடி, தேனியில் மாவட்ட ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கையும் நிறைவு பெற்றுள்ள. திருச்சி, கரூர், திருவாரூர் மாவட்டங்களில் அனைத்துப் பதவிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றுள்ளது.
தற்போதைய நிலவரப்படி 515 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 180 இடங்களுக்கான முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 180 இடங்களில் திமுக கூட்டணி 103, இடங்களிலும் அதிமுக கூட்டணி 69, இடங்களிலும் மற்றவை 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.