சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், புதுப்பேட்டை ஆயுதப்படைத் துணை ஆணையாளர் அலுவலக வளாகத்தில், சென்னை பெருநகரில் பணிபுரியும் பெண் காவலர்கள் முதல் பெண் ஆய்வாளர்கள் வரையிலான சுமார் 4,800 பெண் காவல் ஆளிநர்களுக்கு ‘சமநிலை வாழ்க்கை முறை’ (WORK LIFE BALANCE)என்ற 3 நாட்கள் சிறப்பு பயிற்சி வகுப்பினைத் துவக்கிவைத்தார்.