Skip to main content

அண்ணா நினைவிடத்திலே கலைஞருக்கும் இடம் ஒதுக்க வேண்டும்: பாலபாரதி

Published on 08/08/2018 | Edited on 08/08/2018

 

திமுக தலைவர் கலைஞர் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடமில்லை என தமிழக அரசு அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளது. 
 

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பாலபாரதி நம்மிடம் கூறியதாவது,
 

 

 

அண்ணா நினைவிடத்திலே அதன் பின்புற பகுதியில் கலைஞருக்கு இடம் ஒதுக்கீடு செய்யலாம். அரசு இந்த நேரத்தில் இப்படி ஒரு முடிவெடுப்பது என்பது சரியல்ல. தமிழ்நாடு ஒரு பெரும் துக்கத்தில் இருக்கிறது. அவர் ஒரு மூத்த தலைவர், 5 முறை முதலமைச்சராக இருந்தவர், அப்படி இருக்கும் போது மரியாதை செய்வது தான் சரியாக இருக்கும்.
 

 

 

மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, கனிமொழி எல்லோரும் முதல்வரின் வீட்டிற்கு சென்று அவரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அப்படி இருக்கும் போது, ஏற்கனவே இருக்கும் இடம் தானே அதனை ஒதுக்குவதில் தமிழக அரசுக்கு என்ன? ஆகவே அதனை ஒதுக்க வேண்டும் என்பது தான் அனைவரின் நிலைப்பாடாகவும் உள்ளது.
 

தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டு 11 நாட்களாக மருத்துவமனையிலே உள்ளனர். அப்படி இருக்கும்போது இது போன்ற முடிவுகள் அசம்பாவிதத்தை ஏற்படுத்தும். அதனால், கலைஞருக்கு மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகில் இடம் ஒதுக்குவதே சரியாக இருக்கும். நியாமாகவும் இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''அமலாக்கத்துறையை வைத்து தேர்தலுக்கு பணம் வசூலிக்கும் பாஜக''-முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி குற்றச்சாட்டு 

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

former MLA Balabharti accused of collecting money for elections using the enforcement department

 

திண்டுக்கல்லை சேர்ந்த மருத்துவரிடம் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் பெற்ற புகாரில் கைதுசெய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் திண்டுக்கல்லில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம், முன்னாள் மாவட்டச் செயலாளர் பாண்டி ஆகியோர் உடனிருந்தனர்.

 

செய்தியாளர்களிடம் பேசுகையில், ''வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேவையான பணத்தை வசூலிப்பதற்காக பாஜக அமலாக்கத்துறையை தற்பொழுது பயன்படுத்தி வருகிறது. அமலாக்கத்துறை மத்திய அரசின் அடியாள் துறையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மதுரையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அனுமதி அளிக்காமல் துணை ராணுவத்தை அலுவலகம் முன்பு கொண்டுவந்து நிறுத்தியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. காவல்துறையினர் சோதனை செய்ய அனுமதி அளிக்க முடியாது எனக் கூறுவதற்கு இவர்களுக்கு என்ன உரிமை உள்ளது. விசாரணை செய்ய காவல்துறையினர் வருகை தந்தால் அவர்களை அனுமதிப்பது தான் ஜனநாயக முறையாகும். ஆனால் அனுமதிக்க முடியாது என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

 

இது அராஜக போக்காகும். உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படக்கூடிய  அமலாக்கத்துறை, பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்த உத்தரவின் பேரில் தான் நான் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் என அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி டாக்டர் சுரேஷ் பாபுவிடம் பேசியுள்ளார். உள்துறை அமைச்சகத்திற்கு சம்பந்தம் இல்லாமல் ஒரு அமலாக்கத்துறை அதிகாரி எப்படி இவ்வாறு பேச முடியும். ஆகவே உள்துறை அமைச்சகத்திற்கும் இந்த சம்பவத்திற்கும் சம்பந்தம் உள்ளது. ஆகவே தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை, தமிழக காவல்துறை இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

இது சாதாரண விஷயம் இதனை அரசியல் ஆக்காதீர்கள் லஞ்சம் வாங்குவது என்பது அனைத்து துறைகளிலும் உள்ளது என பொதுப்படையாகக் கூறி வருகிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. மத்திய அரசையும், அமலாக்கத்துறையும் காப்பாற்றும் விதமாக பேசி வருகிறார். மூன்று கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதை நியாயப்படுத்தும் வகையில் பேசி வருகிறார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தேர்தல் செலவுக்காக அமலாக்கத்துறையை பாஜக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை. மேலும் மாநில அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவிற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது'' என்று கூறினார். 

 

 

Next Story

“திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்” - பாலபாரதி

Published on 11/10/2022 | Edited on 11/10/2022

 

"DMK government must fulfill its election promise" - Balabharathi

 

கரூர் மாவட்டம்,  கடவூர் ஒன்றியத்தில் 20க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளில், 100-நாள் வேலை வழங்காததை கண்டித்து அகில இந்திய விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆகியவை சார்பில், தரகம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு  காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த காத்திருப்பு போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநில செயற்குழு உறுப்பினருமான பாலபாரதி தலைமை வகித்தார். போராட்டத்தில், 100 நாள் வேலை திட்டத்தை உடனே வழங்க வேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்தினர்.

 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி, “கடவூர் பகுதியில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்படவில்லை. ஒரு சில பகுதிகளில் ஐந்து நாள், பத்து நாள் என பெயரளவிற்கு வேலை கொடுத்து வருகின்றனர். அதில் அரசு நிர்ணயித்த 282 ரூபாய் தருவதில்லை, மாறாக 210 ரூபாய் மட்டுமே தரப்படுகிறது. எனவே 100 நாள் திட்டத்தை உடனடியாக வழங்க வேண்டும். மறுக்கும் பட்சத்தில் மத்திய அரசு அலுவலகம், பாஜக அலுவலகம் ஆகியவற்றை முற்றுகையிடும் சூழ்நிலை ஏற்படும். தமிழக அரசு உள்ளாட்சித் துறை உடனடியாக இந்த திட்டப்பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். அது போல திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலை திட்டத்தை  200 நாளாக உயர்த்தி வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். அதற்குள்ளாக 150  நாட்களாவது அவர்களுக்கு வேலை வழங்க வேண்டும்” என்றார்.