Bakrit festival;  Pallapatti Goat Market!

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ளபள்ளப்பட்டியில்இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த மக்கள் அதிகப்படியாக வாழ்வதால் கரூர் மாவட்டம்,பள்ளப்பட்டியில்பக்ரீத்பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இதன் காரணமாகபள்ளப்பட்டியில்ஆண்டுதோறும் ஜூலை 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில்ஆட்டுசந்தை நடைபெறும். அந்த வகையில் இன்று (ஜூலை 8) ஆட்டுச்சந்தை நடைபெற்றது.

Advertisment

இதையொட்டி கரூர், அரவக்குறிச்சி, திருப்பூர், காங்கேயம், ஈரோடு உள்பட பல்வேறுபகுதிகளில் இருந்துஅதிகாலையே வியாபாரிகள் சரக்குஆட்டோ,வேன்,லாரிபோன்ற வாகனங்களில் ஆடுகளைவிற்பனைக்காககொண்டுவந்தனர். இவற்றைவாங்குவதற்காகபொதுமக்களும் வியாபாரிகளும் என ஆயிரக்கணக்கானோர் சந்தையில் குவிந்தனர். இதனால் விற்பனை அமோகமாக நடந்தது.

Advertisment

பொதுவாக இந்த சந்தையில் 10 கிலோ எடை கொண்ட கிடா ஆடு ரூ. 12 ஆயிரம் என விற்பனையாகும். ஆனால்பக்ரீத்பண்டிகை விற்பனை என்பதால், சற்று விலை அதிகரிக்க பத்து கிலோ எடை கொண்ட ஆட்டின் விலை ரூ. 15 ஆயிரம் முதல் ரூ.16 ஆயிரம் வரைவிற்பனைக்குபோனது. இந்தச் சந்தையில்ஜமுனாபுரிஎன்ற 65 கிலோ எடை கொண்ட ஆடு ரூ. 35 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.