Published on 10/08/2021 | Edited on 10/08/2021

கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து கடவுள்களையும், பிரதமர் உள்ளிட்ட தலைவர்களையும் இழிவாகப் பேசியதாக கிறிஸ்தவ மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா என்பவர் மீது 7 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப் பதிவுசெய்து அவரை தேடிவந்த நிலையில், கடந்த மாதம் 24ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ஜாமீன் கோரி அவர் கீழ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்த நிலையில், மதுரை உயர் நீதிமன்றக் கிளை அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.