Skip to main content

என் இறப்புக்கு காரணம் மத்திய, மாநில அரசுகள்தான்- கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை விட்ட தொழிலாளி!

Published on 03/12/2019 | Edited on 03/12/2019

ஒரு மனிதன்  தனது இறப்புக்கு என்ன காரணம் என்று கூறுவான் ஒன்று குடும்ப பிரச்சனை மற்றொன்று கடன் பிரச்சனை அடுத்து அவனைச் சுற்றியுள்ள பிரச்சனைகள் ஆனால் மத்திய, மாநில அரசுகள் தனது இறப்புக்கு காரணம் என்று கூறுவது மிகவும் அரிதான செய்தி. ஈரோட்டில் விசைத்தறி உரிமையாளர் ஒருவர் நேற்று இரவு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் தனது இறப்புக்கு மத்திய, மாநில அரசுகளே  காரணம் என கூறியிருக்கிறார்.

 

bad incident in erode... police investigation


ஈரோடு மாணிக்கம்பாளையம் சக்திநகரை சேர்ந்தவர் கனகராஜ் இவருக்கும் வயது 42. விசைத்தறி உரிமையாளர். தொழிலில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் சென்ற  சில நாட்களாக கனகராஜ் மனவேதனையுடனே இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை கனகராஜ் ஈரோடு அருகே ரங்கம்பாளையத்துக்கு தனது பைக்கில் சென்றுள்ளார்.

அங்குள்ள ஒரு கிணற்றுக்கு அருகில் தனது  பைக்கை நிறுத்திவிட்டு கனகராஜ் நேராக சென்று அங்குள்ள கிணற்றில் குதித்தார். அவர் கிணற்றில் குதித்த சம்பவம் யாருக்கும் தெரியவில்லை. மாலை 6 மணி அளவில் யாரும் கேட்பாரற்று நின்றிருந்த பைக்கை பார்த்து, அங்கிருந்த பொதுமக்கள் கிணற்றுக்குள் எட்டி பார்த்தபோது, அந்த  கனகராஜ் இறந்த நிலையில் தண்ணீரில் மிதந்து கொண்டிருப்பது தெரியவந்தது. இதுசம்பந்தமாக ஈரோடு போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தனர்.


இதையடுத்து ஈரோடு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றில் மிதந்த கனகராஜின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட கனகராஜூக்கு வனிதா என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர்.

 

bad incident in erode... police investigation


கனராஜ் தற்கொலை குறித்து போலீசாரின் அந்த பகுதியில் விசாரணை நடத்தினர். இதில், கனகராஜ் தற்கொலை செய்வதற்கு முன்பாக அங்கிருந்த ஒரு மூதாட்டியிடம் அவரது மணி பர்ஸ் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அந்த கடிதம் இருந்துள்ளது. கனகராஜ்  தற்கொலை செய்து கொண்டதும் அந்த மணிப் பர்சில் கனகராஜ் கடைசியாக எழுதி வைத்த கடிதத்தில் இருப்பது  "என் இனிய அன்பு நண்பர்களே ஜவுளி தொழிலுக்கு மத்திய, மாநில அரசுகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, என்னுடைய மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் என கனகராஜ் தனது கடிதத்தில் எழுதி வைத்துள்ளார்.

 

bad incident in erode... police investigation


ஜவுளி தொழிவில் நசிவு ஏற்பட்டதற்கு மிக முக்கிய காரணம் மத்திய அரசின் புதிய ஜவுளி கொள்கையே காரணமாக இருக்கிறது. இந்த இறப்பிற்கு காரணம் யார்? மத்திய, மாநில அரசுகளே காரணமாக அமைத்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.