Skip to main content

மீண்டும் பாரம்பரிய களத்துத் தோசை... 

Published on 17/02/2020 | Edited on 17/02/2020

"சுலபமாக இவ்வளவு வேலை செய்ய முடியுமா என்ன..? அதற்கு சத்தான ஆகாரம் வேண்டாமா..?" என்ற கேள்வியுடன் விவசாயிகளின் பசி போக்க, சத்தான உணவாக மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது பாரம்பரிய களத்துத் தோசை எனப்படும் இரட்டைத் தோசை.

 Back to the traditional field  dosa sivagangai district

அரிசி, உளுந்து மற்றும் வெந்தயம் சேர்த்து அரைக்கப்பட்ட மாவில் இட்லி, தோசை வார்ப்பதுதான் வழக்கமான ஒன்று. அதே மாவினைக் கொண்டு முதலில் தோசை ஒன்றை வார்த்தெடுத்து வைத்துவிட்டு, மீண்டும் மற்றொரு தோசையை வார்த்தெடுத்து அதில் நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய், சுக்கு உள்ளிட்ட கலவைகளை தூவியும், எண்ணெய்க்கு பதில் நெய்யை ஊற்றியும் வேகவைத்து, அதன் மேல் ஏற்கனவே வார்த்த வைக்கப்பட்டிருந்த தோசையை மூடியும் ஒருசேர வைத்து எடுப்பதே பாரம்பரிய களத்துத் தோசை எனப்படும் இரட்டைத் தோசை.

 Back to the traditional field  dosa sivagangai district

சிவகங்கை மாவட்டம் கல்லல் வட்டாரம் வேப்பங்குளத்தில் தங்களுக்கென்று பிராண்ட் வைத்து ஆன்லைனில் அரிசி விற்பனை செய்யும் கிராமத்துக்காரர்கள் உள்ளூரில் நெல் கொள்முதல் செய்ய ஆரம்பித்துள்ளனர். இதனையறிந்த மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அங்கேயே நெல்கொள்முதல் செய்ய உத்தரவிட, தினசரி 40- க்கும் அதிகமான விவசாயிகள் அங்கு வந்து செல்வதும், நெல்லை எடை வைப்பது, பேக்கிங் செய்வது போன்ற பணிகளில் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

 Back to the traditional field  dosa sivagangai district

ஆனால் அவர்களின் பசி போக்க அங்கு வழியில்லை என்பதால் அங்கேயே பாரம்பரியமிக்க களத்துத் தோசையை வார்த்து விவசாயிகளின் பசியை போக்கி வருகின்றார் ராமலட்சுமி என்பவர். " இது எனக்கு என்னுடைய மாமியார் சொல்லிக் கொடுத்தது. ஒரு நபர் ஒரு தோசை சாப்பிட்டால் போதும். அன்றைக்கு தேவையான அத்தனை சத்தும் கிடைத்துவிடும். பசியும் இருக்காது. அந்த காலத்தில் ஒரு தோசைக்கு ஒரு படி நெல் என பண்டமாற்று முறையில் கொடுப்பார்கள். இந்தக் காலத்திற்கு அது சரியா வருமா எனத் தெரியாது. எனினும், விவசாயிகளின் பசி போக்குவதில் எனக்கு பெருமை தான்." என்கிறார் அவர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அனைவரும் ஒன்றுபட வேண்டும்” - விவசாயிகளுக்கு ஆதரவாக காலா பட நடிகர்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
nane patekar about farmers

இந்தி மற்றும் மராத்தியில் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் நானா படேகர். கடைசியாக தி வேக்ஸின் வார் படத்தில் நடித்திருந்தார். தமிழில் ரஜினியின் காலா படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இப்போது ஜேர்னி (Journey) என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

திரைப்படங்களில் நடித்துக் கொண்டே மற்றொரு மராத்தி நடிகரான மகரந்த அனஸ்புரேவுடன் இணைந்து ‘நாம்’ என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதன் மூலம் மகாராஷ்டிராவில் உள்ள வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். இந்த நிலையில், நாசிக்கில் நடைபெற்ற ஷேத்காரி சம்மேளன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், “விவசாயிகள் நல்ல நேரத்துக்காகக் காத்திருக்காமல் விடாமுயற்சியின் மூலம் நல்ல காலங்களைக் கொண்டு வர வேண்டும். 

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். தங்கம் விலை உயரும்போது, அரிசி விலை ஏன் உயரவில்லை? விவசாயிகள் முழு தேசத்திற்கும் உணவு வழங்குகிறார்கள். ஆனால் அவர்களின் குறைகளை தீர்க்க அரசுக்கு நேரமில்லை. இதுபோன்ற அரசிடம் விவசாயிகள் எதையும் கோர வேண்டாம். எந்த மாதிரியான இலட்சியத்தை இளம் தலைமுறைக்கு முன் வைக்கிறீர்கள்? நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நான் வெளிப்படையாக பேசும் நபர் என்பதால் என்னால் அரசியலில் சேர முடியாது. தற்போதைய நிலையை மாற்ற நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்” என்றார். 

Next Story

போராட்டத்திற்கு தேதி குறித்த விவசாயிகள்!

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
 Farmers on the date for the struggle 

விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் அறிக்கையை அமல்படுத்துவது என்பன உள்ளிட்ட 12 அம்ச வேளாண் கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் டிராக்டர்களில் உணவு, மருந்து பொருட்களுடன் ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தச் சென்றபோது மாநில எல்லையிலேயே முள்வேலிகள், தடுப்புக்கட்டைகள் அமைத்து தடுக்கப்பட்டனர்.

இந்த தடுப்புக்கட்டைகளைத் தகர்த்தெரிந்த விவசாயிகள் தடைகளை மீறி டெல்லி நோக்கி புறப்பட்டபோது விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் நிலைகுலையச் செய்தனர். மேலும் ரப்பர் குண்டுகளால் சுடப்பட்டனர். கண்ணீர் புகை குண்டுகளால் ஏற்பட்ட நச்சுப் புகையால் மூச்சுத் திணறிய 65 வயது கியான் சிங் என்ற விவசாயியும், ரப்பர் குண்டு பட்டுத் தலையில் காயமடைந்த 21 வயது இளம் விவசாயி ஒருவரும் போராட்டக் களத்திலேயே உயிரிழந்தனர். இதற்கிடையில் விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் சுமூகமான உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. அதே சமயம் டெல்லி எல்லைகளில் தொடர் போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து விவசாயிகள் விரிவான ஆலோசனை செய்து வந்தனர்.

இந்நிலையில் மார்ச் 10 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் கூறுகையில், “டெல்லிக்கு பேரணியாக செல்லும் எங்கள் (விவசாயிகள்) திட்டம் அப்படியே உள்ளது. அதிலிருந்து நாங்கள் பின்வாங்கவில்லை. எல்லையில் பலத்தை அதிகரிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மார்ச் 6 ஆம் தேதி விவசாயிகள் நாடு முழுவதிலும் இருந்து ரயில், பேருந்து, விமானம் மூலம் டெல்லிக்கு செல்ல திட்டமிட்டுள்ளோம். அங்கு போராட்டத்தில் கலந்துகொள்ள அரசு அனுமதிக்குமா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மார்ச் 10 ஆம் தேதி நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்துவோம். அன்றைய தினம் நன்பகல் 12 மணி முதல் மாலை முதல் 4 மணி வரை ரயில் மறியல் போராட்டம் நடைபெறும்” எனத் தெரிவித்தார்.