முக கவசத்துடன் பாதுகாப்பாக தூங்கும் கைக்குழநதை (படங்கள்)

சென்னை மண்ணடியில் நடைபாதையில் மக்கள் வசிக்கின்றனர். இதில் ஒரு குடும்பத்தினர் அனைவரும் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க பாதுகாப்புக்காக முக கவசம் அணிந்துள்ளனர். இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்களுக்கு பிறந்த குழந்தைக்கும் முக கவசம் அணிந்துள்ளனர். சாலையோரத்தில் இருப்பதால் எப்போதும் முக கவசம் அணிகிறோம். நோய் தொற்று ஏற்படுமோ என்ற பயமும் இருக்கிறது. தினமும் வேலைக்கு சென்றால்தான் குடும்பத்தை சமாளிக்க முடியும். தற்போது ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் வேலை எதுவும் இல்லை. இதனால் கடும் சிரமமாக உள்ளது என தெரிவித்தனர்.

Chennai corona virus people
இதையும் படியுங்கள்
Subscribe