Skip to main content

முறையற்ற உறவில் பிறந்த குழந்தையைக் கொன்ற கொடூர தாய்

Published on 29/07/2022 | Edited on 29/07/2022

 

Baby passed away police arrested her mother and grandmother Baby passed away police arrested her mother and grandmother

 

வலங்கைமான் அருகே முறையற்ற உறவில் பிறந்த ஆண் குழந்தையை கொடூரமாக கொன்று வீட்டின் பின்புறம் புதைத்த  தாயையும், பாட்டியையும் போலீசார் கைதுசெய்துள்ளனர்.

 

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அடுத்துள்ள சாரநத்தம் ஊராட்சி வேடம்பூர் தோப்பு தெருவைச் சேர்ந்தவர் முத்து, இவரது மனைவி ரேணுகா. இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கணவருடன் கோபித்துக்கொண்டு ரேணுகா தனது தாய்வீட்டில் கடந்த ஏழு ஆண்டுகளாக குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கணவர் முத்து திருப்பூரில் வேலைபார்த்துக்கொண்டு அங்கேயே இருந்துவருகிறார்.

 

இந்தநிலையில் வறுமையை போக்க குடவாசல் பகுதியில் உள்ள ஜவுளிக்கடைக்கு வேலைக்கு சென்ற ரேணுகாவிற்கு, அந்த கடையில் வேலைபார்த்த, அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டு அது திருமணத்தை மீறிய உறவாக மாறி, அந்த தவறான உறவின் காரணமாக ரேணுகா கர்ப்பமடைந்துள்ளார். 


அதனைத் தொடர்ந்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த 19ஆம் தேதி ரேணுகாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. அங்கிருந்து 24ஆம் தேதி குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்ற ரேணுகா, பெற்ற பச்சிளம் குழந்தையை கொன்று வீட்டின் பின்புறம் புதைத்துவிட்டதாக போலீசருக்கு தகவல் கிடைத்துள்ளது.


அதிர்ச்சி அடைந்த போலீசாரும், தாசில்தாரும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் ரேணுகாவும் அவரது தாயார் ரேவதியும் கொன்று புதைத்தது தெரியவந்துள்ளது.


இது தொடர்பாக போலீசார் கூறுகையில், "24ஆம் தேதி திருவாரூர் அரசு மருத்துவமனையிலிருந்து ரேணுகாவும், அவரது அம்மா ரேவதியும் சிசுவை தூக்கிக்கொண்டு வேடம்பூரில் உள்ள ரேவதி வீட்டிற்கு வந்துள்ளனர். அரசு பஸ்ஸில் வந்து இறங்கியவுடனே முறையற்ற உறவால் பிறந்த குழந்தையை வீட்டில் எடுத்துச் செல்லக்கூடாது, ஊரில் அவச்சொல் ஏற்படும் என யோசித்த இருவரும், பச்சிளம் குழந்தையை கொலை செய்ய திட்டமிட்டனர். குழந்தையை கழுத்தை நெறித்து வீட்டிற்கு கொண்டு போய் பாத்திரத்தில் மூடி வைத்து, அதிகாலையில் குழந்தை இறந்துவிட்டதாக புரளியாக்கிவிட்டு, வீட்டிற்கு பின்புறம் குழி தோண்டி புதைத்துள்ளனர். உண்மையை கண்டறிந்த காவல்துறை வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளோம்" என்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.