Skip to main content

தவறான உறவுக்கு தடையாக இருந்ததாக பெற்ற தாயே பிஞ்சு குழந்தைக்கு சூடு!!

Published on 27/10/2018 | Edited on 27/10/2018

கள்ளக்காதலுக்கு இடையூறு இருந்ததாக இரண்டரை வயது குழந்தைக்கு பெற்ற தாய் சூடு வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திருநெல்வேலி மாவட்டம் குஞ்சன்விளைவு பகுதியை சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர் தனது கணவர் செல்வத்துடன் பெங்களூரில் வசித்து வருகிறார். இவர்களுக்கு இரண்டரை வயதில் ஹன்சிகா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது.

 

The baby  of the mother injured  who had been a barrier to the wrong relationship

 

கடந்த ஐந்தாம் தேதி ஊர் திருவிழாவிற்காக பெங்களூரில் இருந்து குடும்பத்துடன் வந்த மகாலட்சுமி தனது பழைய காதலன் கதிரவனை சந்திக்க நேர்ந்துள்ளது. திருவிழாவிற்கு பிறகு கணவர் மட்டும் பெங்களூர் செல்ல மகாலட்சுமி சொந்த ஊரிலேயே தங்கி உள்ளார். அப்பொழுது மகாலட்சுமி கள்ளகாதலனான கதிரவன் இருவரும் அடிக்கடி சந்தித்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் இருவரும் குழந்தையுடன் மாயமாகியுள்ளனர்.

 

The baby  of the mother injured  who had been a barrier to the wrong relationship

 

அதனை அடுத்து மஹாலட்சுமியின் கணவர் போலீசில் புகாரளிக்க மகாலட்சுமியே நேரில் வந்து காவல்நிலையத்தில் ஆஜரானார். அப்போது குழந்தையின் உடலில் தீக்காயங்களை கண்டு அதிர்ந்து போன போலீசார் இது குறித்து விசாரித்ததில் கள்ள உறவுக்கு இடையூறாக இருந்ததால் ஒன்றரை வயது சிறுமி ஹன்சிகாவிற்கு சூடு போட்டதாக மகாலட்சுமி ஒப்புக்கொண்டார். பிஞ்சு குழந்தைக்கு சூடு போட்ட தாயான மகாலட்சுமியை போலீசார் கைது செய்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

நாடக மேடையில் வெட்டி வைக்கப்பட்ட தலை; பரபரப்பில் திருமங்கலம்

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
Love Affair; There is excitement in Thirumangalam

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே திருமணத்திற்குப் பிறகும் பெண் தன்னுடைய காதலை தொடர்ந்ததால் ஆத்திரமடைந்த பெண்ணின் சகோதரன், சகோதரியையும் அவருடைய காதலனையும் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் கொம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (28). கட்டடங்களில் கம்பி கட்டும் வேலையைப் பார்த்து வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த அழகுமலை என்பவருடைய மகள் மகாலட்சுமி என்பவரை சதீஷ்குமார் காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

காதலுக்கு எதிர்ப்பு அதிகரித்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மகாலட்சுமிக்கு வேறொரு நபருடன் திருமண ஏற்பாடு செய்யப்பட்டு திருமணம் நடந்து முடிந்தது. ஆனால் திருமணம் ஆன ஒரே வாரத்திலேயே மகாலட்சுமிக்கும் அவருடைய கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தாய் வீட்டிற்கே வந்துவிட்டார். இந்த நிலையில், தாய் வீட்டிற்கு வந்த மகாலட்சுமி தன்னுடைய முன்னாள் காதலன் சதீஷ்குமாரோடு செல்போனில் பேசி வந்துள்ளார்.

இது மகாலட்சுமியின் தம்பி பிரவீன் குமாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இருவரையும் கூப்பிட்டு கண்டித்த நிலையிலும் மீண்டும் அவர்களுடைய காதல் தொடர்ந்தால், ஆத்திரம் அடைந்த பிரவீன் குமார் இரவில் நடந்து வந்து கொண்டிருந்த சதீஷின் கண்ணில் மிளகாய் பொடியைத் தூவி தலையை வெட்டித் துண்டித்துள்ளார். தலையை அந்த ஊரின் மையப் பகுதியில் உள்ள கலையரங்க நாடக மேடையின் மீது வைத்துவிட்டுச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் வீட்டிற்குச் சென்று சகோதரி மகாலட்சுமியின் கழுத்தையும் அறுத்துக் கொலை செய்திருக்கிறார். தடுக்க வந்தவர்கள் கையையும் வெட்டியுள்ளார்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், மதுரை காவல் கண்காணிப்பாளர் மற்றும் திருமங்கலம் சரக டிஎஸ்பி ஆகிய பலரும் விரைந்து வந்து இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தில் கொடூரக் கொலையை நிகழ்த்திய பிரவீன் குமாரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில், தற்போது பிரவீன் குமார் சரணடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story

திருமணத்தை மீறிய உறவு; ஆண் நண்பருடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி

Published on 06/11/2023 | Edited on 06/11/2023

 

husband who lost his life along with wife's boyfriend for extramarital affair

 

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (38). இவர் அந்த பகுதியில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று (05-11-23) அந்த பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த, அங்கிருந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

 

தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோவிந்தராஜின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இது குறித்து கோவிந்தராஜின் மனைவி கார்த்திகாவிடம் (35, பெயர் மாற்றப்பட்டுள்ளது) கேட்ட போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதில் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். 

 

அதில், கார்த்திகாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமிக்கும் (35) பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம், நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இவர்கள் ஓராண்டுக்கு முன்பு வீட்டை வெளியேறினர். இதனால், இது குறித்து கோவிந்தராஜ் ஏலகிரி மலை போலீஸில் புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில் அவர்களை கண்டுபிடித்து அறிவுரைகள் கூறி கோவிந்தராஜையும், கார்த்திகாவையும் காவல்துறையினர் சேர்த்து வைத்தனர். இருப்பினும், கார்த்திகாவின் உறவு தொடர்ந்துள்ளது. இதனால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. 

 

இந்த நிலையில், நேற்று முன் தினம் (04-11-23) இரவு கார்த்திகாவும், கோவிந்தசாமியும் மாட்டு கொட்டகையில் சந்தித்து பேசியுள்ளனர். இதனை கண்ட கோவிந்தராஜ் அவர்களை கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவர்கள், அங்கிருந்த மண்வெட்டியை எடுத்து கோவிந்தராஜை சரமாரியாக வெட்டி தாக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. ஆண் நண்பருடன் கணவரை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.