Baby, mother, father dies

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த இடைச்செருவாய் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (29). இவருக்கு திருமணமாகி உஷா (25) என்கின்ற மனைவிம், பிரதிக்ஷா (2) என்கிற பெண் குழந்தையும் உள்ளது.

Advertisment

பிரகாஷ் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உணவகம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் பிரகாஷ் நேற்று குஜராத்திலிருந்து தனது சொந்த ஊரான திட்டக்குடி அடுத்த இடைச்செருவாய் கிராமத்திற்கு மனைவி குழைந்தையுடன் வந்துள்ளார். நீன்ட நாட்களாகவே கணவன் மனைவிக்கிடையே தகராறு இருந்துள்ளது. இருவருக்கும் இடையே உள்ள பிரச்சனைகள் தீர நேற்று அப்பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்று வழிபட்டுள்ளனர்.

Advertisment

baby

நேற்று இரவு இடைச்செருவாய் கிராமத்தில் உள்ள வீட்டில் உறங்க சென்ற இவர்கள் இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. வீட்டின் கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர். கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கும்போது உஷா தூக்கில் தொங்கிய நிலையிலும் குழைந்தை பிரதிக்ஷா மற்றும் பிரகாஷ் ஆகியோர் இறந்த நிலையிலும் கிடந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் திட்டக்குடி காவல்நிலையத்திற்க்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த திட்டக்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.