Advertisment

இரண்டரை வயது பெண் குழந்தை கிணற்றில் சடலமாக மீட்பு - கோவையில் பரபரப்பு

கோவை விளாங்குறிச்சியில் இரண்டரை வயது பெண் குழந்தை கிணற்றில் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கோவை அன்னூர் கரியகவுண்டனூரை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி காஞ்சனா. இவர்கள் கோவை விளாங்குறிச்சியில் உள்ள குப்புராஜ் தோட்டத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். ஜேசிபி வாகனம் வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டரை வயதில் அம்ருதா என்ற பெண் குழந்தை இருந்தது.

Advertisment

child - covai

ஞாயிற்றுக்கிழமை இவர்களது வீட்டிற்கு உறவினர்கள் வந்திருந்தனர். இரவு உணவு சாப்பிட்ட பின்பு குழந்தையுடன் காஞ்சனா மற்றும் கனகராஜிம் வீட்டின் உள்ளே உறங்கச் சென்றார். வீட்டின் வெளியே வந்திருந்த உறவினர்களில் சிலரும் வீட்டின் வெளியே கட்டிலில் படுத்து தூங்கியுள்ளனர். அதிகாலை இரண்டரை மணியளவில் பாத்ரூம் செல்வதற்காக எழுந்த காஞ்சனா குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு உறங்க வைத்துள்ளார்.

இன்று காலை நாலரை மணிக்கு காஞ்சனா எழுந்து பார்த்தபோது குழந்தை காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் முன்பு எங்காவது விளையாடிக்கொண்டு இருக்கும் என தேடிப்பார்த்தனர். அருகில் எங்காவது இருக்குமா எனவும் உறவினர்கள் மற்று கனகராஜிம் தேடிப்பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை.

வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில் கருவேலங்காட்டுப் பகுதியில் தேடிப்பார்த்தபோது அங்கு உள்ள பாழடைந்த கிணற்றில் குழந்தை அம்ருதா கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே கிணற்றில் கயிற்றை கட்டி இறங்கி குழந்தையை தூக்கினர். குழந்தை மயங்கி இருப்பதாக நினைத்து தூக்கிக்கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பீளமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Baby girl well covai child
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe